Wednesday, March 31, 2010

உயிர்கொல்லி காதலுக்கெதிரான விழிப்புணர்வு தேவை...

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதாரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.


பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

      ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது.  என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்ட வேண்டும்.

தொகுப்பு: எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

> > திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

> > வாழ்வின் அர்த்தம்  புரிந்து வாழலாம்! 

> > சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு            ஓடுகிறாய்! 

 என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது 
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல....
 மல்லிகைப்பூ  தந்துவிட்டு  மன்றாடுகிறாய்!

> > பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...

> > மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! 

> > அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...  பதறி எழுந்து நிலை.

> உணர்ந்து சிரிக்கிறாய் ! கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையைபோல அழுகிறாய் !


> > மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

> > கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்... அழுவதும்...அணைப்பதும்...கண்டிப்பதும்...

> > கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா

> > "அடி கள்ளி "..... இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

> > எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
> > எல்லாமே கனவா.......?  கணவனோடு இரண்டுமாதம்....கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> > 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
 2 வருடமொருமுறை கணவன்...

> > நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

 நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
 நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்  திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... 

> > வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்  விட்டுகொடுத்து...தொட்டு பிடித்து... தேவை அறிந்து... சேவை புரிந்து... உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து....தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு.

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

 இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்

 
> பரிமாறிக்கொள்ளவேண்டும்  இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு

> உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

> > தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

> > எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

> > இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

> > விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

> > பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

> > நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

> > அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

> > விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> > பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய்

> > சென்றாயே?

> > பாலையில் நீ வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய்

> > போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த

> > புகைப்படம் அனுப்புகிறாய்!

> > உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது -                                                என் வாழ்க்கையல்லவா..? விழித்துவிடு கணவா!> விழித்து விடு -

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!

> > விசாரித்து விட்டு போகாதே என் கணவா விசா ரத்து செய்துவிட்டு   வா!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம்                        புரிந்து வாழலாம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் குறிப்பிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்' என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி 2006 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு உற்பத்தியை தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் கொள்கையின் கீழ் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பூதலூர், மதுக்கூர், ஒரத்தநாடு , பாபநாசம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருப்பணந்தாள், திருவையாறு, திருவோணம் ஆகிய யூனியன் பகுதிகள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் ரூபாய் 25 லட்சம் வரை இயந்திர தளவாடங்களில் முதலீடு செய்துள்ள நுண் தொழில்களுக்கு இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியம், உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து மூன்று ஆண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியம் ஆறு ஆண்டுக்கு கணக்கிடப்பட்ட மதிப்புக்கூட்டு வரிக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியம், பின்தங்கிய ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்திற்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் ஆகியவை வழங்கப்படும்.

பின்தங்கிய ஒன்றிய பகுதிகளில் தொடங்கப்படும் நுண் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் தொடங்கப்படும் விவசாயம் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தப்படும் தொழில்களுக்கும் இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் 25 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத வேலை வாய்ப்பு பெருக்க மானியமாக ரூபாய் ஐந்து லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறன் படைத்தோர் மற்றும் திருநங்கையரால் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத கூடுதல் முதலீட்டு மானியம், ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து மூன்றாண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியமும், பிற்படுத்தப்பட்ட ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்துக்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீத மானியமும் வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியிலும் அமைக்கப்படும் மின் மற்றும் மின்னனுப்பொருட்கள் தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்து பொருட்கள், சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைக்ள், மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள், விளையாட்டு கருவிகள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய சிறப்பு வகை உற்பத்தி இனங்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திரங்கள், தளவாடங்களின் மதிப்பில் 15 சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் 30 லட்சத்துக்கு மிகாமல் மானியமாக வழங்கப்படும்.இவைகள் தவிர புதிதாக வாங்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மான்யம் வழங்கப்படும். கூடுதல் விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மைய மேலாளர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொலைபேசி எண் 255318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பா


உறவுகளில் தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

வாழ்த்துக்க‌ளோடு,
தங்கப்பா...

Tuesday, March 30, 2010

BUS....MISS.... FIND

ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினம்

உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.



நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும். இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.


இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;






நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;


ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?


'அபூ சுப்யான்;இல்லை.[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7






முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?


'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.நூல்;புஹாரி


வியாபாரத்திலும் பொய் கூடாது;


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி






வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்;தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார் (என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) 'தபூக்' போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.நூல்;புஹாரி,எண் 4673






மற்றொரு ஹதீஸில்;அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான். 'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.' (திருக்குர்ஆன் 09:117-119)நூல்; புஹாரி, எண் 4678






கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?பொய்யர்களுக்கு தண்டனை;


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,


என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பெய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்! --


3/27/2010 09:35:00 PM அன்று முகவை எக்ஸ்பிரஸ். இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது

புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி (New Online Dictionary)

புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி


சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன. ஆனால் ஒரு சொல்லை அதன் பொருள் குறித்துப் படிப்பதனால் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் சூழ்நிலை, தொடர்புடைய சொற்களுடன் புரிந்து கொள்ளுதல், அச்சொல்லை மனதில் பதியவைக்கும். இந்த நோக்குடன் இணையத்தில் ஒரு டிக்ஷனரி கிடைக்கிறது. இதன் பெயர் வேர்ட் நிக் (Wordnik) மேலே கூறப்பட்டவற்றுடன், அந்த சொற்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உள்ள இடங்கள், அவற்றின் பொருள், தொடர்பான படங்கள், போட்டோக்கள், ஒன்றுக்குப் பலவாக விளக்கங்கள், பயன்படுத்துவது எப்படி என்ற எடுத்துக்காட்டுகள், தொடர்புள்ள மற்ற சொற்கள், சொற்களின் மூலக்கூறுகள் என அனைத்தையும் இந்த டிக்ஷனரி தருகிறது. இவற்றுடன் இன்றைய சொல் என்று தினம் ஒரு சொல்லை விளக்கத்துடன் காட்டுகிறது. “எங்கள் இலக்கு ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அவை சார்ந்த அனைத்தையும் தருவதாகும். அத்துடன் சொற்கள் குறித்து அதனைப் படிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று காட்டுவதும் ஆகும் என இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சொல்லின் அதே பொருளைத் தரும் சொற்களை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய சொற்களையும் இந்த டிக்ஷனரி தருகிறது. எடுத்துக்காட்டாக Cheeseburger, milkshake மற்றும் doughnut ஆகியவை ஒரே பொருளைக் குறிப்பவை அல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இது போன்ற தொடர்புடைய சொற்களும் இந்த டிக்ஷனரியில் கிடைக்கின்றன.


ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்று காட்டும் வேளையில், உங்கள் உச்சரிப்பினையும் பதிந்து கொள்ள வழி தரப்பட்டுள்ளது. இதன் பன்முகத் தன்மை கிராஸ் வேர்ட் மற்றும் ஸ்க்ராபிள் போன்ற புதிர் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களை ஈர்க்கிறது. இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்களில் ஐரோப்பியர்கள் 11 பேருடன் குமணன் ராஜ மாணிக்கம் என்ற தமிழரும் உள்ளார் என்பது இதன் சிறப்பு.


இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டிக்ஷனரியைப் பயன்படுத்தவும், சொற்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களைப் பதியவும், நீங்கள் எப்படி இதற்கு உதவலாம் என்று கூறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.wordnik. com

தங்கப்பா


இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்

திங்கள்கிழமை, மார்ச் 29, 2010, 9:47[IST]

டெல்லி: இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

Monday, March 29, 2010

Thangappa Madukkur: தமிழ்நாட்டுப் பழமொழிகள்#links#links

Thangappa Madukkur: தமிழ்நாட்டுப் பழமொழிகள்#links#links

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) குழுமத்தில் நண்பர் சீ.ந.ராஜா எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்:


ஒரு ஆவணச் சேமிப்பின் எண்ணத்தில் இங்கு பதிகிறேன்.




தமிழ்நாட்டுப் பழமொழிகள்







அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.


அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.


அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.


அசையாத மணி அடிக்காது


அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.


அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.


அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.


அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.


அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.


அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.


அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.


அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.


அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.


அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.


அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.


அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.


அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.


அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.


அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.


அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.


அன்பே கடவுள்.


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.


அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.


அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.


அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.


அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!


அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.


அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.


அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.


அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.


அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.


அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.


அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.


அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.


அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.


அதிக ஓய்வு அதிக வேதனை.


அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?


அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.


அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.


அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.


அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.


அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.


அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.


அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.


அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.


அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?


அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.


அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.


அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.


அரசனும் அன்னைக்கு மகனே.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.


அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்


அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!


அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.


அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.


அவனன்றி ஓர் அணுவும் அசையாது.


அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.













ஆடிப்பட்டம் தேடி விதை.


ஆழம் தெரியாமல் காலை விடாதே!


ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!


ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.


ஆயுள் நீடிக்க உணவைக் குறை.


ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.


ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.


ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.


ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.


ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.


ஆறுவது சினம்.


ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.


ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.


ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.


ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.


ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?


ஆலயம் தொழுவது சாலவும் நன்று.


ஆலை விழுது தாங்கியது போல.


ஆடு பகை குட்டி உறவா?


ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.


ஆடி ஓய்ந்த பம்பரம் போல.


ஆரம்பத்தில் சூரத்துவம்.


ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.


ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.


ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.


ஆற்றுநீர் பித்தம் போக்கும்


குளத்து நீர் வாதம் போக்கும்


சோற்றுநீர் எல்லாம் போக்கும்


ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.













இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.


இளமையில் கல்.


இளங்கன்று பயமறியாது.


இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.


இளமையில் கல். முதுமையில் காக்கும்.


இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.


இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.


இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.


இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.


இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.


இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.


இறங்கு பொழுதில் மருந்து குடி.


இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.


இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.


இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?


இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.


இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.


இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.


இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.


இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.


இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.


இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.


இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.


இடுக்கன் வருங்கால் நகுக.










ஈ.






ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.


ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.


ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.


ஈட்டி எட்டிய வரையில் பாயும்.


ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.













உழுத நிலத்தில் பயிரிடு.


உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.


உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.


உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.


உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.


உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.


உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.


உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.


உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.


உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.


உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.


உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.


உழைத்து உண்பதே உணவு.


உப்பிட்டவரை உள்ளவும் நினை.


உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு













ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.


ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.


ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.


ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.


ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.


ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.













எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிரே வந்த நாயை அடிச்சானாம்.


எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.


எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.


எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.


எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.


எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.


எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.


எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.


எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.


எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.


எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?


எண்ணம்போல் வாழ்வு.


எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?













ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.


ஏழை சொல் அம்பலம் ஏறாது.


ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.


ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.


ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!


ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.













ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.


ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?













ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.


ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.


ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.


ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.


ஒரு கை தட்டினால் ஓசை எழாது.


ஒழுக்கம் விழுப்பம் தரும்.


ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.


ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.


ஒத்தடம் அரை வைத்தியம்.


ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.


ஒருவர் பொறுமை இருவர் நட்பு.













ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.


ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.


ஓடிப் பழகிய கால் நிற்காது.


ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.













கண்ணுக்கு இமை பகையா?


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.


கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.


கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?


கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.


கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.


பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.


கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.


கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.


கடுங்காற்று மழைக்கூட்டும்.


கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.


கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.


கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.


கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.


கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.


கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.


கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.


கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.


கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.


கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?


கல்வி விரும்பு.


கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.


கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?


கணக்கு எழுதாதன் நிலைமை.


கழுதை புரண்ட இடம் மாதிரி.


கந்தையானாலும் கசக்கிக் கட்டு.


கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.


கடலில் கரைத்த பெருங்காயம் போல.


கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.


கடல் திடலாகும்; திடல் கடலாகும்.


கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?


கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.


கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.


கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.










கா






காலம் போகும் வார்த்தை நிற்கும்.


கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.


கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?


கார்த்திகை கன மழை.


கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.


கார்த்திகை கண்டு களம் இடு.


கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.


காணிச் சோம்பல் கோடி நட்டம்.


காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.


காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.


காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.


காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.


காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.


காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?


காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.


கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.


கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை


கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.


கார்த்திகை கால் கோடை.


கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.






கி






கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.


கிட்டப் போயின் முட்டப் பகை.


கிட்டாதாயின் வெட்டென மற.


கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.


கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.






கீ






கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி






கு






குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.


குருடனுக்கு ஒரே மதி.


குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.


குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.


குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.


குதிரையும் கழுதையும் ஒன்றா?


குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.


குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.


குடி குடியைக் கெடுக்கும்.


குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.


குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.






கூ






கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.


கூழானாலும் குளித்துக் குடி.


கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.


கூலிப் படை வெட்டுமா?


கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.






கெ






கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை


கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?


கெடுவான் கேடு நினைப்பான்.


கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.


கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.






கை






கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.


கை பட்டால் கண்ணாடி.


கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.






கொ






கொடிக்கு காய் பாரமா?


கொடாக் கண்டன் விடாக் கண்டன்.






கோ






கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.


கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.


கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.


கோமளவல்லிக்கு ஒரு மொழி


கோளாறுகாரிக்குப் பல மொழி


கோபத்திற்குக் கண்ணில்லை.






கௌ






கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.

















சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை


சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.


சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி


சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.










சா






சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.










சி






சிறுதுளி பெருவெள்ளம்.


சிறு புண்ணையும், ஏழை உறவினனையும் அலட்சியம் செய்யாதே.


சிறு துரும்பும் பல்குத்த உதவும்.


சித்திரை எள்ளைச்சிதறி விதை.


சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை


பங்குனி என்றால் பருப்பதும் இல்லை


வைகாசி என்றால் வளர்வதும் இல்லை


சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.


சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.


சித்திரை மழை செல்ல மழை.






சீ






சீரைத் தேடின் ஏரைத்தேடு










சு






சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?


சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!


சுக்கைப் போல மருந்தில்லை.


சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.


சுத்தம் சோறு போடும்.


சுற்றம் சூழ வாழ்


சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.


சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.






சூ






சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.


சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.


சூதும் வாதும் வேதனை செய்யும்










செ






செயல்தான் மிகச்சுருக்கமான பதில்


செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.


செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?










சே






சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.


சேற்றில் முளைத்த செந்தாமரை










சோ






சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.


சோம்பித் திரியேல.


சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?













தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை கண்டது யாரு?


தண்ணீரே உணவுகளின் அரசன்.


தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!


பெண்ணிற்குச் சோதனை தங்கம்!


மனிதனுக்கச் சோதனை பெண்!


தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை


தண்ணீரில் அடி பிடிக்கிறது.


தலை பகை, வால் உறவா?


தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.


தலைக்குத் தலை பெரிய தனம்.


தன் தப்பு பிறருக்குச் சத்து


தன் உயிர்போல் மண் உயிர் நினை.


தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.


தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.


தன் கையே தனக்கு உதவி.


தர்மம் தலை காக்கும்.


தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.






தா






தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.


தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.


தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.


தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.


தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


தானே தவறி விழுபவன் அழுவதில்லை.


தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.


தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.


தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.


தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.






தி






திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.


திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.






தீ






தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.


தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.






து






துறவிக்கு வேந்தன் துரும்பு.


தும்பி பறந்தால் தூரத்தில் மழை.


துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.


தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?


துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.


துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.






தூ






தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.


தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.


தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.


தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.


தூங்காதவனே நீங்காதவன்.


தூரமிருந்தால் சேர உறவு.










தெ






தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.


தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.


தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.


தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.


தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?


தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.










தை






தையல் சொல் கேளேல்.


தை பிறந்தால் வழி பிறக்கும்.






தொ






தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.













பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.


பணம் பத்தும் செய்யும்.


பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.


பணம் உள்ளவனுக்கு அச்சம்;


பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.


பசித்துப் புசி, வியர்த்துக் குளி.


பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.


பல் போனால் சொல் போச்சு.


பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.


பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.


பங்குனி மாதம் பதர் கொள்.


பங்குனி மாதம் பந்தலைத் தேடு.


பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.


படுக்க படுக்க பாயும் பகை.


பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.


பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.


பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.


பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.


பணம் பாதாளம் வரை பாயும்.






பா






பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.


பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!






பி






பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!


பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.


பிச்சை புகினும் கற்கை நன்றே!


பிணியற்ற வாழ்வே பேரின்பம்.


பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.






பு






புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.


புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.


புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்


சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்


யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!


புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.


புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.


புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;


முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.






பூ






பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.


பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.


பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?


பூ விற்ற கடையில் புல் விற்கவும்;






பெ






பெண் கையில் கொடுத்த பணம் தங்காது


ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.


பெண் என்றால் பேயும் இரங்கும்.


பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.


பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.


சுவருக்கு மண்ணிட்டுப் பார்


பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.






பொ






பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,


பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.


பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;


பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.


பொறுமை கடலினும் பெரிது.


பொறுத்தார் பூமி ஆள்வார்.


பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.


பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.






போ






போகும்போது புளியமரத்தடியில் போ


வரும்போது வேப்பமரத்தடியல் வா.













நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.


நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.


நன்றி மறவேல்.


நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.


நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.


நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.


நன்மைக்கு நன்மை செய்


தீமைக்கு நன்மையே செய்


நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்


நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.


நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.






நா






நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை


நாளை என்பது நட்டாற்று ஓடம்.


நாளை என்று ஒருநாள் உண்டா?


நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.


நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.


நாளும் அதிகாலையில் நீராடு.


நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?






நி






நிலையாமை ஒன்றே நிலையானது.






நீ






நீலிக்கு கண்ணீர் இமையிலே.


நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.


நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.






நெ






நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.


நெருப்பென்றால் வாய் வந்து விடாது.






நொ






நொறுங்கத் தின்றால் நூறு வயது.


நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.






நோ






நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.













மனம் போல வாழ்வு


மனம் ஒரு குரங்கு


மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி


மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.


மனைவி வீட்டின் ஆபரணம்.


மனைவி சொல்லே மந்திரம்.


மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்


மனித நேயம் வளர்ப்பதே மதம்.


மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.


மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.


மதியாதார் வாசல் மிதியாதே!


மனசாட்சியை ஏமாற்றாதே!


மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.


மந்திரம் கால்; மதி முக்கால்.


மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.


மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.


மனிதனின் அழகு அவன் நாக்கு.






மா






மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.


மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!


மாசி பங்குனியில் கரும்பு ஆறு!


மாதா, பிதா, குரு, தெய்வம்.






மி






மின்னுவதெல்லாம் பொன்னல்ல


மீ






மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?






மு






முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.


முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு


முன் வைத்த காலை பின் வைக்காதே!


முயன்றால் முடியாதது இல்லை.


முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.


முயற்சி திருவினையாக்கும்.






மூ










மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.


மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.


மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.






மை






மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!













வட்டியோடு முதலும் போச்சு.


வளைகிற முள் நுழையாது.


வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.


வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.


வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.


வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.


வண்டி வந்தால் வழி உண்டாகும்.


வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.






வா






வாய் உள்ளவன் உள்ளே.


வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!


வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.


வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.


வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.


வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.


வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.


கடந்த காலம் ஒரு கனவு


வருங்காலம் ஒரு பெருமூச்சு


வாய் அரை வைத்தியன்.


வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்


வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.






வி






வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்


விரலுக்கேற்ற வீக்கம்.


விளையும் பயிர் முளையிலே தெரியும்






வீ






வீணை கோணினும் நாதம் கோணுமா?






வெ






வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.






வே






வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்




நன்றி...
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)