Tuesday, April 13, 2010

பெற்றோரை பிள்ளைகள் உணர்வதில்லை....

சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும். தலையணைமந்திரம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை உடலால்
தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம்.

ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை.வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள்

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...
சோமாலிய கடற்கொள்ளையர்கள்...கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்...

"நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)"

ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பின்னால் ஒரு மாபெரும் சோகக்கதையே இருக்கிறது. ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்?


இந்த பதிவில் இவர்கள் இந்த நிலைக்கு வந்த காரணங்களை காணவிருக்கிறோம்...இன்ஷா அல்லாஹ்...

சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்பது மில்லியன் (90 லட்சம்). மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு. இந்திய கடலையும், எடேன் வளைகுடாவையும் (Gulf of Aden) கொண்ட நாடு. 1991 முதல் கடுமையான சிவில் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடு. மீன்பிடி தொழில் தான் அவர்களது முக்கியமான தொழில். அந்த தொழிலுக்கே ஆபத்து வந்தால்?

சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்தன. அதாவது அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டுவந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும் பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. கொஞ்சநஞ்சமல்ல பெரிய அளவில் கழிவுகள். ஐ.நா சுற்றுசுழல் அமைப்பு அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது.


இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், மிக நீண்ட காலங்களாகவே, அதாவது 1989 முதலே, ஐரோப்பிய நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சோமாலியா நாட்டு கடலில் கொட்டுகின்றன என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது.

இப்போது சுனாமி அலைகள் தெள்ளத்தெளிவாக அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிட்டன . இதில் என்ன பெரிய கொடுமை என்றால், அந்த கழிவுகளில் அணுக்கழிவுகளும் இருந்ததுதான்.

நீண்ட காலங்களாக சோமாலியா கடற்கரை பகுதி மக்கள் அனுபவித்து வந்த உடல்நிலை கோளாறுகளுக்கும் விடை அளித்துவிட்டது சுனாமி. கேட்பவர் நெஞ்சை நொறுக்கும் செய்தி இது. ஒருவனை அழித்து இன்னொருவன் வாழ்வது...

பின்னர் இது சம்பந்தமான உண்மைகள், ஆதாரங்கள் வெளிவந்தன. ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு இதற்கெல்லாம் காரணம் சில ஐரோப்பிய தொழிற்சாலைகள்தான் என்று வெளிப்படையாக கூறியது.


இந்த கொடுமையெல்லாம் போதாது என்று, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுளில் இருந்து வரக்கூடிய கப்பல்கள் சோமாலிய கடற்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக மீன்பிடித்தன. இது சோ மாலியர்களுக்கு மாபெரும் பிரச்சனை. ஏனென்றால் இவர்களிடம் இருப்பதோ சிறிய படகுகள் மற்றும் கப்பல்கள், அவை அந்த கப்பல்களுக்கு எந்த விதத்திலும் நிகராகாது.

இப்படி ஒரு புறம் கழிவுகளாலும், மறுபுறம் சட்டவிரோத மீன்பிடி நிகழ்வுகளாலும் சின்னா பின்னமாகி போனார்கள் சோமாலியர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்பதற்க்கு நிலையான அரசாங்கம் கிடையாது. இந்த சூழ்நிலை தான், சில சோமாலியர்களை மீடியாக்கள் கூறுவது போல் கொள்ளையர்கள் ஆக்கியது.

இவர்கள் என்ன கூறுகிறார்கள் இதைப்பற்றி?

தாங்கள் கொள்ளை அடிப்பது சீரழிந்து போயிருக்கும் சோமாலிய கடற்பகுதியை மேம்படுத்துவதற்க்காகவும், மேற்கொண்டு கப்பல்கள் எந்த அசம்பாவிதத்தையும் செய்யாமல் காப்பதற்காகவும் தான் என்பது.

இன்றளவும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற வருடம் ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இவர்கள் கடத்தி சென்றதாக செய்திகளில் பார்த்திருப்போம். அந்த கப்பலை இவர்கள் கடத்தியதற்கு இவர்கள் கூறிய காரணம், அந்த கப்பல் சோமாலிய கடற்பகுதியில் மீன்பிடித்தது என்பது தான்.

இதனால் தான் இவர்கள் தங்களை கடற்காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

அதுசரி எப்படி இத்தனை கப்பல்கள் இவர்களிடம் மாட்டுகின்றன. இதற்கு நாம் சோமாலியாவின் பூலோக வரைப்படத்தை பார்த்தால் விடைச்சொல்லி விடலாம். ஐரோப்பாவில் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்து வளைகுடா நாடுகளை தாண்டிசெல்லும் கப்பல்கள் எல்லாம் இவர்களது நாட்டையோற்றிய எடேன் வளைகுடாவை தாண்டித்தான் தான் செல்லவேண்டும். அங்கே தான் மடக்குகிறார்கள்.

எப்படி பிடிக்கிறார்கள்? எப்படி பணம் பெறுகிறார்கள்? பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பணத்தை என்ன செய்கிறார்கள்? எப்போது இது முடிவுக்கு வரும்? இன்ஷா அல்லாஹ்...அடுத்த பதிவில்...

இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் தெரியுமா இவர்கள்? நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்கள் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை...

அதாவது, சமீபத்தில் ஹைய்தி தீவில் ஏற்ப்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு தாங்கள் ஒரு பெரிய தொகையை தருவதாகவும், அந்த தொகை எப்படியாவது அம்மக்களுக்கு சென்று விடும் என்று அறிவித்ததும் தான்.

அதுசரி, சோமாலியா நாட்டை சீரழித்துவரும் சிவில் யுத்தத்திற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்...நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன?

இன்ஷா அல்லாஹ்...இன்றுமுதல் நம்முடைய துஆக்களில் சோமாலிய மக்களையும் சேர்த்துக் கொள்வோம்...

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Thanks to Mr.Akbarali al fajar

புவி வெப்பமயமாதல்...





















> புவி வெப்பமயமாதல்

> பற்றி உலகம் முழுவதுமே

> மிகுந்த அக்கறையுடன்

> விவாதம்

> நடைபெற்றுக்

> கொண்டிருக்கிறது.

> லாபம் மட்டுமே குறி

> என்ற நிலையில்

> இருக்கும் வளர்ந்த

> நாடுகளின் அரசுகள்

> மற்றும் அந்நாடுகளைச்

> சேர்ந்த

> பன்னாட்டு பகாசுர

> நிறுவனங்கள் ஆகியவை

> மட்டுமே இந்தப்

> பிரச்சனையில்

> வில்லன்களாகச்

> செயல்படுகின்றன.

> அண்மையில் நடந்த

> கோபன்ஹேகன்

> உச்சிமாநாடு

> தோல்வியடைந்ததற்கு

> அமெரிக்கா மற்றும்

> அதன் கோஷ்டி

> கானக்குழுவில் இடம்

> பெற்றிருக்கும்

> நாடுகளும்தான்

> காரணமாகும். தற்போது

> புதிய கோஷ்டி ஒன்றை

> உருவாக்கும் பணியில்

> ஈடுபட்டுள்ளது என்ற

> செய்தியும் ஏற்கெனவே

> வெளியாகியுள்ளது. ஐ.நா.

> சபையின் குழு

> வெளியிட்ட சில தவறான

> கணிப்புகளைக்

> கொண்டு வெப்பமயமாதல்

> ஒரு பிரச்சனையே இல்லை

> என்று திரித்துக்

> கூறும்

> முயற்சியும்

> நடக்கிறது.

>

> வெப்பமயமாதலால்



> நதிகள், ஏரிகள் காணாமல்



> போய்க்கொண்டிருக்கின்றன

> என்ற

> செய்திகள் ஒருபக்கம்.

> மறுபக்கத்தில்

> நதிகளைத்



> திருப்பிவிடுவதால்



> கடலே



> காணாமல் போகப்போகிறது

> என்ற அதிர்ச்சியான

> தகவல்கள்

> வெளியாகியுள்ளன. ஆரல்

> கடல் என்று

> அழைக்கப்பட்டாலும்

> உலகத்திலேயே

> நான்காவது பெரிய ஏரி

> என்றுதான்

> அதை புவியியல்

> வல்லுநர்கள்

> குறிப்பிடுகிறார்கள்.

> மத்திய ஆசியப்

> பகுதியில்

> உள்ள இந்த ஆரல்

> கடலுக்கு ஏற்பட்டுள்ள

> கதி அதிர்ச்சியான

> தகவல்களை

> அளித்துள்ளது.

>

> அமுதர்யா மற்றும்



> சிர்தர்யா என்ற இரு



> ஆறுகளின் இயற்கையான



> போக்கை மாற்றும்



> வகையில் திருப்பி



> விடப்பட்டதால்தான்



> இந்த ஆரல் கடல்



> சுருங்கிக்



> கொண்டிருக்கிறது.

>

> கடந்த 50 ஆண்டுகளில் 90

> விழுக்காடு ஆரல் கடல்

> பகுதி

> சுருங்கிவிட்டது.

> இன்னும் சில

> பத்தாண்டுகளில் ரியல்



> எஸ்டேட்காரர்களின்



> கைகளில் அந்தப்பகுதி



> போனாலும்



> ஆச்சரியப்படுவதற்கில்லை

> என்பதுதான் தற்போதைய

> நிலைமை. முன்னாள்

> சோவியத் நாடுகளான

> உஸ்பெகிஸ்தான்

> மற்றும் கஜகிஸ்தான்

> ஆகிய நாடுகளை

> எல்லைகளாகக்

> கொண்டுள்ள இந்த ஆரல்

> கடல், ஒரு காலத்தில் 67

> ஆயிரத்து 339

> சதுர கி.மீ. பரப்பளவைக்

> கொண்டதாக இருந்தது.

> நீர் மேலாண்மை பற்றி

> ஆய்வு

> செய்பவர்களும்,

> பேசுபவர்களும் இதைக்

> கணக்கில் எடுத்துக்

> கொள்ளாமல்

> இருப்பது, அவர்களின்

> கருத்தை முழுமை பெறச்

> செய்யாது என்ற

> அளவுக்கு

> இந்தப்பிரச்சனை

> தாக்கம்

> ஏற்படுத்தியுள்ளது.

>

> ஒவ்வொரு ஆண்டும் 31

> முதல் 35 அங்குலங்கள்

> வரை ஆரல் கடல் மட்டம்

> குறைந்துகொண்டே

> போயுள்ளது. இதன்

> தாக்கத்தை ஒவ்வொரு

> பத்தாண்டு

> காலத்திலும்

> எடுக்கப்பட்ட

> புகைப்படங்கள்

> காட்டுகின்றன. இதன்

> பாதிப்பு

> பற்றி ஆராய

> ஹெலிகாப்டரில் பயணம்

> செய்து பார்வையிட்ட

> ஐ.நா.சபை

> பொதுச்செயலாளர் பான்

> கி மூன், இந்த கடல்

> வற்றிப் போகும்

> பிரச்சனையைத்

> தீர்க்க அனைத்து

> மத்திய ஆசிய நாடுகளின்

> தலைவர்களும் இணைந்து

> செயல்பட

> வேண்டும் என்று

> வேண்டுகோள்

> விடுத்தார். ஆரல்

> கடலுக்கு ஏற்பட்டுள்ள

> கதிதான் உலகிலேயே

> பெரிய அளவில்

> நிகழ்ந்துள்ள

> சுற்றுச்சூழல்

> பேரழிவாகும்.

> பெரும் அதிர்ச்சியை

> ஏற்படுத்தும்

> அளவுக்கு பாதிப்பு

> ஏற்பட்டுள்ளது.

>

> அனைத்து தலைவர்களும்

> ஒன்றாக அமர்ந்து

> தங்களுக்குள்

> இருக்கும்

> வேறுபாடுகளை

> மறந்துவிட்டு, இந்த

> சுற்றுச்சூழல்

> பேரழிவைத் தடுக்க

> வேண்டும் என்று

> கடுமையான விமர்சனத்தை

> அவர் முன்வைத்தார்.

>

> உஸ்பெகிஸ்தான்

> மற்றும் கஜகிஸ்தான்

> ஆகிய நாடுகள்

> மட்டுமல்லாமல்,

> தஜிகிஸ்தான் போன்ற

> நாடுகளும் தண்ணீர்ப்

> பிரச்சனையை எழுப்பி

> வருகின்றன.

> நீரை எவ்வாறு



> பங்கிட்டுக் கொள்வது



> என்பதைத் தீர்வு



> காணுவதிலேயே இந்த



> நாடுகள் கவனம்



> செலுத்திக்



> கொண்டிருக்கின்றன.

> ஆனால் இருப்பதும்

> போகப்போகிறது

> என்பதைத்தான் பான் கி

> மூன் சுட்டிக்

> காட்டியுள்ளார்.

> தற்போது தண்ணீர்



> இல்லாமல் வெறும் மணற்



> பகுதியாக கணிசமான ஆரல்



> கடற்பரப்பு



> மாறியுள்ளது.

>

> அந்தப் பகுதியில்

> உருவாகும் மணற்காற்று

> வடக்கில் டென்மார்க்,



> ஸ்வீடன்,



> பின்லாந்து ஆகிய



> நாடுகள் வரையிலும்,



> கிழக்கில் ஜப்பான்



> வரையிலும் மணலை



> அள்ளிக் கொண்டு



> செல்கிறது என்று

> வல்லுநர்கள்

> கூறுகிறார்கள்.

>

> புதிது, புதிதாக

> ஏற்கெனவே பல்வேறு

> நோய்கள் உருவாகிக்

> கொண்டிருக்கும்

> சூழலில் இந்த மணற்

> காற்றும் மக்களை

> பாதிக்கிறது.

> வெப்பமயமாதல் பற்றிப்

> பரந்த மேடையில்

> விவாதம் செய்து

> கொண்டிருக்கும்

> வேளையில்,

> இப்போதைக்கு,

> இருக்கும் நீரை எப்படி

> சரியான முறையில்

> பயன்படுத்தலாம்

> என்பது பற்றிய

> விவாதமும் அவசியம்

> என்று நீர் மேலாண்மை

> வல்லுநர்கள்

> கூறுகிறார்கள்.

> இந்தியா உள்ளிட்ட

> பல்வேறு நாடுகள்,

> இருக்கும் நதிகளை

> இணைப்பது, திருப்பி

> விடுவது ஆகியவை

> தண்ணீர்ப்

> பிரச்சனையைத்

> தீர்க்கும் என்று

> ஆலோசனை

> நடத்திக்

> கொண்டிருக்கின்றன.

> குறுகிய

> காலத்திட்டமாக

> இத்தகைய ஆலோசனை

> நடத்தாமல், ஆரல்

> கடலுக்கு ஏற்பட்ட

> கதியை கருத்தில்

> கொண்டு நீண்டகாலத்

> திட்டத்திற்கு

> விவாதங்களை நடத்துவதே

> பூமிப்பந்தைக்

> காப்பாற்ற உதவும்

> என்பது அவர்களின்

> கருத்தாக இருக்கிறது.

சோதிடம், கைரேகைகள், கிளி ஜோசியம், சகுணம்,ராசிக்கல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


ஈமான் பறிபோகலாமா?
அன்புச் சகோதர சகோதரிகளே! நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் நம்மை சோதித்துப்பார்ப்பதற்காகவே நன்மைகளையும், தீமைகளையும் உருவாக்கியுள்ளான். உதாரணமாக

நன்மைகளின் மூலம் சோதனைகள்!
நம்மில் சிலர் சிலருடைய வாழ்க்கையில்கு தீமைகளை விட நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதாரத்தில், மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றில் சீரும் சிறப்பும் பெற்றிருப்பார்கள்! இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா? என்பதற்காக நன்மைகள் கொடுத்து சோதிக்கிறான்!

தீமைகள் மூலம் சோதனைகள்!
நம்மில் சிலர் சிலருக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பேரிழப்புகள், தொழில் நஷ்டங்கள், மனைவி மக்களின் தவறாக வழிமுறைகளால் குடும்பத்தில் நிம்மதி யின்மை, துக்கம், அழுகை போன்றவை காணப்படும் இப்படிப்பட்ட சோதனைகளை கொடுத்தால் ஒருவன் தனக்கு கீழ்படிகிறானா? அல்லது தன்னுடைய கட்டளைகளுக்கு மாறு செய்கிறானா என்று படைத்த ரப்புல் ஆலமீன் சோதிக்கிறான்!

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)

ஆனால் நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை கண்டு நமக்கு இல்லையே என்றும், நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட தீமைகளைக் கண்டு அப்பாடா நாம் தப்பித்தோம் என்றும் வாழ்ந்து வருகிறோம். மேலும் முஸ்லிம்களாகிய நம்மில் சிலர் நன்மையோ தீமையே எப்போது வரும்? எவ்வாறு தடுப்பது? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்றுமதத்தவர்களின் காலடியில் விழுந்து ஈமானை இழந்துவிடுகிறோம் அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுகிறோம்! இதோ ஈமானை இழக்கும் காரியங்கள் உங்கள் பார்வைக்கு:

ஜாதகம் கணிப்பது! நாடி சோதிடம் கணிப்பது!

ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம், வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு ஆதாரம் உள்ளது!

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

இந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே! மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள்! சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா! இன்னுமா நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்று ஏமாறவேண்டும்.

கைரேகைகள் கணிப்பது
ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர். கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான், அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும், அவனது கையில் செல்வம் நிலைக்குமா இல்லை ஓட்டைக் கையா? என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா?

எண் கணித சோதிடம்

13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8ஆக இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர்! அருமைச் சகோதரர்களே! சற்று சிந்தித்துப்பாருங்கள் 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா? அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா? 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே! (அல்லாஹ் காப்பாத்தனும்)

கிளி ஜோசியம்















ஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா? சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும்! அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது! ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள்! அல்லாஹ் படைத்த உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)

பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பல்லி விழும் பலன்
பல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம்! பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது! பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா? என்னய்யா வேடிக்கை இது!

மணி ஓசை சகுணம்














நம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் (மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் ஆலயமணி அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா?


பூனை சகுனம்




















ஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம் நடக்காது என்பார்கள்! சிந்தித்துப்பாருங்கள்! பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும்! பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்?

விதவை சகுணம்

கைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இழந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும்! இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே சிந்தித்துப்பாருங்கள் தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்!

மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து

வீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள்! வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும்! வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர்? இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து!

ராசிக்கல் மோதிரம்



ராசியாம் ராசிக்கல் மோதிரமம்! பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம்! தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்! ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும்! விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா? இதுவெல்லாம் பணம் கறைக்கம் நாடகம் சகோதரர்களே நம்பி மோசம் போகாதீர்கள்!

மச்சம் கணிப்பது

முகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து! தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா? நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான்! நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்!

ஒரு நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.

அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.



நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி

முடிவுரை
உங்களுக்கு ஒரு தீங்கு வந்துவிட்டால் உடனே அதற்காக அல்லாஹ்விடம் துவா கேட்டு நல்லுணர்வு பெறாமல் கேடு கெட்ட  கலாச்சரங்களை பின்பற்றுகிறீர்களே நீங்கள் ஈமானின் சுவை சுவைப்பது எப்போது!

திருமறை வசனம்
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)


இப்பதிவிற்கு ஒரு மறுமொழி இடவும்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.


''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.


இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,


''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.


வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

பதிந்தது நேசமுடன் இஸ்லாம்.

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்