Friday, March 5, 2010

பிளவு உதடுகள் (Cleft Lips) மற்றும் பிளவு அண்ணம் (Cleft palate)





பிளவு உதடுகள் (Cleft Lips) மற்றும் பிளவு அண்ணம் (Cleft palate)காரணங்கள்:-

* பிளவு உதடு[Cleft Lip] மற்றும் பிளவு அண்ணம் [Cleft Palate] என்பவை பிறவி குறைபாடுகள் ஆகும். இவை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிறது.
* மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இரண்டும் இணைந்து இக்குறைபாட்டினை தோற்றுவிக்கின்றன.
* பிளவு நிலை மறுபடியும் ஏற்படும் ஆபத்து, குடும்பத்தில் எத்தனை நபர்கள் இக்குறைபாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் நெருக்கம், பாதிக்கப்பட்டவர்களின் இனம் மற்றும் பாலினம் மற்றும் பாதிப்பின் தன்மை போன்றவற்றை உள்ளடக்கி பல காரணிகளைப் பொறுத்து ஏற்படுகிறது.

அறிகுறிகள்:-
* பிளவு உதடு என்பது ஒரு உதடு இரண்டாக பிறிந்திருத்தலாகும்.
* இப்பிளவு மேல்தாடை எலும்புகள் மற்றும் மேல்பல்ஈறுகளிலும் ஏற்படலாம்.
* பிளவு அண்ணம் என்பது வாயின் உள் மேற்கூரையில் ஏற்படும் துவாரம் ஆகும்.
* இந்நிலை, வயிற்றில் வளரும் குழந்தையின் இரண்டு பக்கத்திலும் உள்ள அண்ணம் ஒன்று கூடாததால் ஏற்படுகிறது.
* பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணம் ஒரு பக்கத்திலேயோ அல்லது இரண்டு பக்கத்திலும் ஏற்படலாம். மேலும் பிளவு உதடு மற்றும் அண்ணம் இரண்டும் இணைந்தே ஏற்படலாம்.
மற்றபிற அறிகுறிகளாவன:-

* உடல் எடை அதிகரியாமை
* உணவு உட்கொள்ளுவதில் பிரச்சினைகள்
* உணவு செல்லும்போது பால் உணவுக்குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழல்களில் செல்லுதல்.
* பல்வரிசை ஒழுங்கின்றி மாறி அமைதல்.
* குறைந்த வளர்ச்சி
* காதில் நோய்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுதல்
* பேசுவதில் கடினம்
* மூக்கின் வடிவில் மாற்றம்

தேவையான பராமரிப்பு:-
பிளவுக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பல வகையான உதவிகள் தேவைப்படுகிறது. உ.ம். அறுவை சிகிச்சை, பல்பராமரிப்பு, பேசுவதிற்கான மருத்துவ சிகிச்சை, காதுபராமரிப்பு மற்றும் பிற. தேவையான அனைத்து பராமரிப்புகளையும் ஒருங்கிணைந்த முறையில் பல ஆண்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.


தேவையான சிகிச்சைமுறை திட்டம்:-
* குழந்தை பிறந்த பிறகு - முதலில் பெற்றோர்க்கு, குழந்தைக்கு பால் கொடுப்பது மற்றும் குழதையின் உடல் எடை அதிகரிக்க செய்ய வேண்டுய முறைகளை பற்றி ஆலோசனை கொடுக்க வேண்டும்.
* 3-5 மாதங்கள் - மூக்கை சரி செய்வதோடு பிளந்த உதடுகளையும் பழுதுபார்த்தல்.
* 9-12 மாதங்கள் - பிளவு அண்ணம் பழுது பார்த்தல்.
* 1-2 ஆண்டுகள் - காது கேட்கும் தன்மையை ஆய்ந்தறிந்து, நடுக்காதுகளில் ஏற்படும் நோய் தொற்றுவினை தடுக்கும் வண்ணம் காதுகளில் சேரும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்.
* 2-4 ஆண்டுகள் - பேச்சுத்திறனை கூர்ந்து ஆய்ந்தறிந்து, தேவைப்படின், அதற்கான சிகிச்சை அளித்தல். குழந்தை மருத்துவருடன் தவறாமல் கலந்து ஆலோசனை செய்தல்
* 4-6 ஆண்டுகள் - பிளவு அண்ணத்திற்கான அறுவைசிகிச்சைக்குப் பின், 1-15 சதவிகித குழதைகளுக்கு பேச்சுத்திறனை அதிகரிக்கத் தேவையான அறுவைசிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
* 6-12 ஆண்டுகள் - பல் மருத்துவச் சோதனை மற்றும் பல் சீரமைப்புச் சிகிச்சை.
* 9 ஆண்டுகள் - பற்குழியில் உள்ள குறைபாடுகளை நீக்க எலும்பு மாற்று சிகிச்சை.
* விடலைப் பருவ ஆண்டுகள் - நோயாளியின் வேண்டுதலின் பேரில், முகத்தின் தோற்றத்தை அழகுபடுத்த மூக்கை சரிசெய்ய தேவையான அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளுதல்.
* வாலிபபருவம் - இது போன்ற மரபுசார்ந்த குறைபாடுகள் தொடராதிருக்க ஆலோசனைகள் கொடுத்தல்

பட்ஜெட் 2010-11 : அம்பானிகள் vs சாமானியர்

பட்ஜெட் 2010-11 : அம்பானிகள் vs சாமானியர்
திங்கள், 01 மார்ச் 2010 18:51 இந்நேரம்.காம் Articles

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் 2010 -2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட இந்த நிதி நிலை அறிக்கை பற்றிய ஒரு சிறு அலசல் உங்கள் பார்வைக்காக இங்கு தரப் பட்டுள்ளது.
இந்த நிதி நிலை அறிக்கையில் சாமானிய மக்களை பாதிக்கப் போகும் ஒரு அம்சம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி உயர்த்தப் பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி 2.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக சரக்குகள் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர். ஆட்டோக்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டன. அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகள் முயற்சிக்கும். இதன் பாதிப்பைச் சந்திக்க இருப்பது அம்பானிகள் அல்ல சாதாரண குடிமக்களே.

பெட்ரோலியப் பொருட்களுக்கு வரிச் சலுகை தேவை இல்லை என்று இதற்கு காரணம் கூறுகிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக வரியை விலக்கியதாகவும் தற்போது கச்சா விலை குறைவால் அளிக்கப் பட்ட வரி விலக்கை ரத்து செய்து விட்டதாகவும், புதிதாக எந்த வரியும் விதிக்கப் படவில்லை என்றும் விளக்குகிறார் மாண்புமிகு நிதி அமைச்சர்.

சாதாரண மக்களைப் பாதிக்கக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் பெட்ரோலிய பொருட்களின் வரிகளை உயர்த்திய மத்திய நிதி அமைச்சர் வருமான வரிகளுக்கு மட்டும் சலுகைகளை அள்ளி இறைத்துள்ளார். பாவம் வரி கட்டுபவர்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள் போலும்.

இந்த ஆண்டின் வருமான வரியாக ரூ. 160000 முதல் ரூ. 500000 வரை 10 சதவீதமாகவும், ரூ. 500000 முதல் ரூ. 800000 வரை 20 சதவீதமாகவும், ரூ. 800000 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமாகவும் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். ஒரு பக்கம் அடிப்படைச் சம்பள உயர்வு, அக விலை படி உயர்வு போன்ற உயர்வுகளை அள்ளி இறைத்து விட்டு ரொம்ப கஷ்டப் படக் கூடாது என்று வரி சலுகைகள் வேறு. இதன் மூலம் ரூ. 26000 கோடி வருவாய் இழப்பை சந்திக்கத் துணிந்த அரசு சாதாரண குடிமக்களின் நிலையை உணர மறுத்தது ஏன்?

இந்த சலுகைகள் மூலம் ரூ. 500000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 20000, ரூ. 500000 மற்றும் அதற்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ. 50000 வரையிலும் வருமான வரி செலவு குறையும். சில வருடங்களுக்கு முன்பு 20 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை இருந்த வருமான வரி வீதங்கள் இன்று அதிக பட்சமாக 30 சதவீதமே இருப்பது குறிப்பிடத் தக்கது.

நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த சில மணி நேரங்களில் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்துள்ளது. அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1,987 கோடி உயர்ந்துள்ளது.

தொழில் அதிபர் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ 1085 கோடியும், விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜிக்கு ரூ. 946 கோடியும், பாரதி ஏர்டெல் சுனில் மிட்டலுக்கு ரூ 535 கோடியும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் மீது அதிக வரி விதித்து பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி வருவாயை ஈடு செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வித்திடும் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அதிகரித்து காங்கிரஸ் அரசு மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த பாமர வாக்காளர்களுக்கு பட்டை நாமம் சாத்தியுள்ளார் நிதி அமைச்சர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு பெரிய அளவில் தேர்தல் நிதியை அளித்து அதற்குப் பகரமாக வேறு வகையில் சாதித்துக் கொள்ளும் அம்பானிகளும், பிர்லாக்களும் இருக்கும் வரையில் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது.

மேலும் நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் குழுவில் ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரிகளை மட்டும் வைத்தால் போதாது ஏர் பிடிக்கும் ஒரு விவசாயியும் இடம் பெற்றால் ஒழிய அடித் தட்டு மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையை எந்த அரசாலும் தர இயலாது.

இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் கூறினார். இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டா அல்லது தனவந்தர்களை மேலும் தனவந்தர்களாக்கும் பட்ஜெட்டா என்பது இதை படித்த பின் உங்களுக்கே தெரிந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை

Thanks united muslim yahoo groups



__._,_.___

பணத்துக்காக சிசேரியன்

9 ஆசிய நாடுகளில் சமீபகாலமாக பணத்துக்காக சிசேரியன் மூலம் மகப்பேறு செய்யும் மனிதநேயமற்ற செயல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமே பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சுயப்பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் உயிருக்கும் ஆபத்து மிக மிகக் குறைவு. இதனால் கூடுமானவரை சுயப்பிரசவத்துக்கே முயற்சிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

ஒருவேளை, தாய் அல்லது சேய் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கேனும் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் சிசேரியன் செய்யவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் செய்துகொள்ளலாம். இதை தவிர்க்க இயலாது. ஆனால் அவசியமே இல்லாமல் சிசேரியன் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகபட்சம் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் இந்த அறிவுரையெல்லாம் ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிட்டு பணத்துக்காக சிசேரியன் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 9 ஆசிய நாடுகளில் 2007-08 ஆண்டில் மட்டும் சிசேரியன் பிரசவம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆசிய நாடுகளில் கம்போடியா, இந்தியா, ஜப்பான், நேபாளம், பிலிப்பின்ஸ், சீனா, இலங்கை, வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகமாகவுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத், மத்தியப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் சிசேரியன் அதிகமாக நடக்கிறது. தில்லி மற்றும் மும்பை நகரில் 65 சதவீத குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் பிறக்கின்றன.
இவற்றில் ùரும்பாலான சிசேரியன் தேவையானதல்ல; பணத்துக்காகவே நடைபெறு கின்றன என்பதே கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
9 ஆசிய நாடுகளில் உள்ள 122 மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதி, இங்கு மகப்பேறு நடைபெற்ற பெண்களின் மருத்துவ ஆவணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரியவந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

-மாற்று மருத்துவம் செய்தியாளர்

Thanks: www.keetru.com
கவனத்தில் கொள்க:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நம் பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதற்கே மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றனர்.
பணத்திற்காக....