Tuesday, May 11, 2010

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்

உள்ளூர் பஜ்ரங்தள் தலைவனும், சதித் திட்டங்களைத் தீட்டியச் சூழ்ச்சியாளர்களில் ஒருவனும், இப்பொழுது சிவசேனா உறுப்பினருமான பாபு பஜ்ரங்கி, மோடியைப் பற்றிக் கூறும் போது, “என்னை பெயிலில் வெளியே கொண்டு வருவதற்காக, நரேந்திரபாய் மும்முறை நீதிபதிகளை மாற்றினார்” என்றான்.

மோடிக்கு இம்மனிதன்(?) மேல் ஒரு அனுகிரகம் உண்டு. இவன் தான் பின்னர் பர்ஜானியா என்றத் திரைபடத்தைத் திரையிட விடாமல் தடுத்தவன். ஒருவருக்கொருவர் மரியாதை உண்டு.

பாபு பஜ்ரங்கி தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: பாட்யா சம்பவத்தின் போது மோடி உங்களை ஆதரிக்கவில்லையா?

பஜ்ரங்கி : அவர் தான் எல்லாவற்றையும் சாதகமாக்கித் தந்தார், இல்லையென்றால் யாருக்கு பலம் இவ்வளவு பலம் உண்டு.....? அவருடைய கைகள் தான் எல்லா இடத்திலும் இருந்தது... அவர் மட்டும் காவல்துறையை வேறு வகையில் செயல்படுமாறு கூறியிருந்தால், அவர்கள் எங்களை ஓ..... ....அவர்களால் அது முடிந்திருக்கும்.... முழுகட்டுபாடும் அவர்கள் கையிலிருந்தது.....

 தெஹல்கா: அவர்கள் கட்டுக்குள்ளா?

பஜ்ரங்கி : குஜராத் முழுவதிலும் எல்லா நகரங்களும் அவர்களின் (காவல்துறை) கட்டுபாடுகளும் மிக உறுதியாகவே இருந்தது.. (ஆனால்) இரண்டு நாட்களுக்கு மட்டும் நரேந்திரபாய் தான் தன் கட்டுபாடுக்குள் வைத்திருந்தார்.... மூன்றாவது நாளிலிருந்து அதிகமான அழுத்தங்கள் மேலிடத்திலிருந்து வர ஆரம்பித்தது... சோனியா-வோனியா இன்னும் எல்லோரும் இங்கே வந்தார்கள்....

தெஹல்கா: நீங்கள் சிறைச்சாலையில் இருந்த போது நரேந்திரபாய் உங்களைச் சந்திக்க வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சந்திக்க வந்திருப்பாரானால், அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி வந்திருக்கும்....நான் அவரைப் பார்ப்பதைப் பற்றி எதிர்பார்க்கவில்லை.... இன்று கூட நான் எதிர்பார்க்கவில்லை.

தெஹல்கா: அவர் (மோடி) எப்போதாவது உங்களுடன் தொலைபேசியில் பேசினாரா?

பஜ்ரங்கி : அந்த வழியில் அவருடன் பேசினேன்.... ஆனால் எளிதாக அல்ல.... முழு உலகமே இதைப் பற்றிப் (குஜராத்தில் மோடியின் செயல்பாடுகள்) பேச ஆரம்பித்திருந்தது.

தெஹல்கா: ஆனால் நீங்கள் தலைமறைவாக இருந்த போது, அந்த சமயத்தில் அவர்.......

பஜ்ரங்கி : ம்ம்ம்....நான் இரண்டு அல்லது மூன்று தடவை பேசினேன்.

தெஹல்கா: அவர் (மோடி) எங்களை உற்சாகப்படுத்தினாரா?....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் நெசமான ஆம்பளை....அவர் (மோடி) எனது உடலில் ஒரு வெடிகுண்டு கட்டிக் கொண்டு என்னைக் குதிக்கச் சொல்லியிருந்தால்....அவ்வாறு நான் செய்வதற்கு நொடிப் பொழுது கூட எனக்கு ஆகாது.....நான் உடனே ஒரு வெடிகுண்டு எனது உடலில் சுற்றிக் கொண்டு எங்கு குதிப்பதற்கு நான் கூறப்பட்டேனோ அங்கே குதித்து விடுவேன்..... ஹிந்துகளுக்காக..

தெஹல்கா: அவர்(மோடி) மட்டும் இல்லாதிருந்தால், பிறகு நரோடா பாட்டியா, குலடபர்க் இன்னும்......

பஜ்ரங்கி : நடந்திருக்காது, நடந்திருப்பது மிகக் கடினமே....

தெஹல்கா: நரேந்திரபாய் படுகொலைகள் நடந்த மறுநாள் பாட்டியா வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் பாட்டியா வந்தார்... அவர் சம்பவங்கள் நடந்த இடத்துக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் அவருடன் கமெண்டோ (அதிரடி படையினர்)-பமெண்டோ எல்லோரும் இருந்தார்கள்... ஆனால் பாட்டியா வந்து எங்களுடைய உற்சாகத்தைக் கண்டார். பின்னர் சென்று விட்டார்.... அவர் உண்மையிலேயே நல்ல ஒரு சூழலை விட்டுச் சென்றார்.....

தெஹல்கா: மிக உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைச் சொன்னாரா....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் அங்கு பார்க்க வந்தவைகள் எதுவும் மறுநாளும் நிறுத்தப்படவில்லை....அவர் அஹ்மதாபாத் முழுவதும், மீயாக்களுடைய (முஸ்லிம்கள்) இடங்கள், ஹிந்துக்களுடையப் பகுதிகளும் என எல்லா இடங்களுக்கும் சென்றார்.... அவர்கள் (காவி பாவிகள்) நல்லபடியாக செய்துள்ளதாக மக்களிடம் (?) சொன்னார். அதோடு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.....

 
பஜ்ரங்கி : (படுகொலைகளுக்குப் பின்) காவல்துறை ஆணையாளர் ஆணைகள் பிறப்பித்து இருந்தார் (எனக்கெதிராக)..... நான் எனது வீட்டிலிருந்து வெளியேறுமாறுச் சொல்லப்பட்டேன்...நான் அங்கிருந்து ஓடினேன்... நரேந்திரபாய் என்னை....மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்திருந்தார்.... அதன் பிறகு நரேந்திரபாய் என்னென்ன செய்ய என்னிடம் சொன்னாரோ (நான் செய்தேன்)..... குஜராத்தில் நரேந்திரபாய் செய்ததை போன்று ஒருவராலும் செய்ய முடியாது... நரேந்திரபாயுடைய உதவிகள் மட்டும் எனக்கு இல்லாது இருந்திருந்தால், எங்களால் பழிதீர்த்து (கோத்ரா சம்பவத்திற்காக) இருக்க முடியாது..... (எல்லாம் முடிவடைந்த பிறகு) நரேந்திரபாய் சந்தோசப்பட்டார், மக்கள் (?) சந்தோசமடைந்தனர், நாங்கள் சந்தோசமடைந்தோம்.... நான் சிறைக்குச் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளேன்....முன்பு வாழ்ந்த வாழ்க்கையின் பால் திரும்பி விட்டேன்.

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சிறையிலிருந்து வெளியே எடுத்தார்.... அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்... என்னுடைய விடுதலையை உறுதி செய்வதற்காகவே இதைச் செய்தார். இல்லையெனில் இது வரை என்னால் வெளியே வந்திருக்க முடியாது.... முதல் நீதிபதி ஒரு தோலாகியாஜி... அவர் பாபு பஜ்ரங்கி உறுதியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொன்னார். ஒரு தடவையல்ல நாலைந்து முறை சொன்னார். இன்னும் அவர் வழக்கு சம்பந்தப்பட்டக் கோப்பை ஒரு ஓரத்தில் வீசினார்.... அதன் பிறகு இன்னொருவர் வந்தார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொல்ல வருவதற்கு சற்று முன்பாக அவர் நிறுத்தப்பட்டார்.... இதன் பிறகு மூன்றாவது ஒருவர்... இப்படியாக நாலரை மாதங்கள் சிறையில் கழிந்தது. பிறகு நரேந்திரபாய் ஒரு செய்தியை அனுப்பினார்...அவர் (மோடி) ஒரு வழியைக் கண்டுபிடிப்பதாக அந்தச் செய்தியில் கூறியிருந்தார்... அதன் பிறகு அக்ஸை மேத்தா என்ற பெயருடைய ஒருவரை நீதிபதியாக நியமித்தார்... அவர் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை கூடப் பார்க்கவில்லை... (பெயில்) வழங்கப்படுகிறது என்று மிகச் சதாரணமாக அவர் சொல்லி விட்டார்... அதன் பிறகு நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்... நாங்கள் அனைவரும் விடுதலையானோம்.... இதனால் நான் கடவுள் (?) மீது நம்பிக்கை வைத்துள்ளேன்... நாங்கள் ஹிந்துத்வாவுக்காகச் சாவதற்கும் தாயாராக இருக்கிறோம்.......

விஹெச்பியின் குறிப்பிடத் தகுந்த முக்கிய நபரும், கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிட்ட சதிகாரனான ரமேஷ் தேவ் என்பவன் மோடியைப் பற்றிக்கூறும் போது, “அவருடைய கடுங் கோபம் மிக அதிகமாக இருந்தது” என்றான்.உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த மோடி கோத்ரா சம்பவத்தின் போது தனது உணர்வை உண்மைபடுத்தி காட்டியது, சங்பரிவாரத்திற்காக இறுதி வரை உழைக்கும் ஒரு சகத் தொண்டனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் தேவ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....


ரமேஷ் தேவ்: அன்றிரவு நாங்கள் (விஹெச்பி) அலுவலகத்திற்குப் போயிருந்தோம்... அங்குச் சூழ்நிலை மனதை மிகவும் பாதிக்கக் கூடியதாக இருந்தது... பல ஆண்டுகளாக (நாம் வாங்கிக் கொண்டிருந்தோம்) என ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நரேந்திரபாய் எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி செய்தார்....


தெஹல்கா: கோத்ரா வந்ததும் அவருடைய உணர்வு என்னவாக இருந்தது?

ரமேஷ் தேவ்: கோத்ராவில் அவர் மிகக் கடுமையான தகவலைச் சொன்னார்... அவர் கடுங் கோபத்திலிருந்தார்.... அவர் சங்பரிவாரத்தில் தனது குழந்தை பருவத்திலிருந்தே இருக்கிறார்.... அவரது கோபம் அப்படி இருந்தது..... அப்போது அவர்(மோடி) வெளிப்படையாக வரவில்லையே தவிர, தனது காவல்துறையின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கிச் செயலிழக்கச் செய்தார்.........


சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் மோடியை பற்றி கூறும் போது, “நீங்கள் எல்லோரும் சிறப்பானவர்கள் என்று அவர் எங்களுக்குக் கூறினார்”என்றான்.தனிப்பட்ட முறையில் ரிச்சர்டைப் பாராட்டி வாழ்த்துக்களை மோடி தெரிவித்த போது, மிகச் சிறப்பாக வேலைகளை (இன படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை....) செய்து முடித்ததாக ச்சாரா இனத்தையும் புகழாரங்கள் பொழிந்துப் பாராட்டினார்

சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

சுரேஷ் ரிச்சர்ட்: (படுகொலை நடந்த நாளில்) என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் அனைத்தையும் மாலையின் கடைசி பொழுது வரை முழுமையாகச் செய்தோம்...7:30 மணியளவில்....கிட்டதட்ட 7:15 எங்களுடைய மோடி பாய் வந்தார்.....வீட்டின் வெளியே, இதே இடத்திற்கு.... எனது சகோதரிகள் ரோஜாக்களால் செய்த மாலை அணிவித்தனர்.

தெஹல்கா: நரேந்திர மோடி....

ரிச்சர்ட்: நரேந்திர மோடி....அவர் கருப்பு பூனை அதிரடி படையினருடன் வந்தார்.....தனது அம்பாஸிடர் காரிலிருந்து வெளியேறி இங்கு வரை நடந்து வந்தார்....எனது சகோதரிகள் எல்லோரும் அவருக்கு மாலை அணிவித்தார்கள்...... என்ன இருந்தாலும் பெரிய மனிதன் (?) பெரிய மனிதன் தான்.

தெஹல்கா: அவர் தெருவிலா வந்தார்?

ரிச்சர்ட்: இங்கே, இந்த வீட்டின் அருகே.... பிறகு இந்த வழியாகச் சென்றார்....நரோடாவில் எப்படி உள்ளது என்பதைப் பார்த்தார்.....

தெஹல்கா: பாட்டியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்த நாளன்றா?

ரிச்சர்ட்: அதே மாலை

தெஹல்கா: பிப்ரவரி 28

 ரிச்சர்ட்: 28

தெஹல்கா: 2002

ரிச்சர்ட்: இங்கே அவர் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்... எங்கள் இனம்(ச்சாரா) சிறப்பானது எனக் கூறினார்.....எங்கள் தாயார்களும் சிறப்பானவாகள் (எங்களைச் சுமந்ததால்) ..
தெஹல்கா: அவர் வந்தது 5 மணியளவிலா அல்லது 7 மணியளவிலா?

ரிச்சர்ட்: கிட்டதட்ட 7 அல்லது 7:30.... அந்த நேரத்தில் மின்சாரம் கிடையாது..... வன்முறை கலவரத்தால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது......
தெஹல்கா: நரேந்திர மோடி அன்றைய தினம், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த தினத்தில் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து விட்டுப் போன பின்பு, அதன் பிறகு எப்போவாவது உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருகை தந்தாரா?

ரிச்சர்ட்: ஒரு போதும் இல்லை

ராஜேந்திர வியாஸ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “பழிவாங்குவது என்பதே அவருடைய உறுதிமொழியாக இருந்தது” என்றான்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகுத் தாங்க முடியாத துயரில் இருந்த அஹ்மதாபாத் விஹெச்பி தலைவர் மோடியிடம் இருந்து எல்லாம் பார்த்து கொள்ளபடும் என்ற வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார்.ராஜேந்திர வியாஸ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: நரேந்திர மோடி பற்றி.... நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்...அவருடைய முதல் வார்த்தைகள் என்னவாக இருந்தது (கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு)? உங்கள் அனைவர்களிடமும் அவர் என்ன சொன்னார்?.

ராஜேந்திர வியாஸ்: முதலில் அவர்(மோடி) சொன்னது என்னவென்றால் நாம் பழிவாங்க வேண்டும்...... நான் எதை பொதுவிடத்தில் வைத்து சொன்னேனோ அதையே.... அதன் பிறகு எதையும் நான் சாப்பிட கூடவில்லை.... ஒரு துளி தண்ணீர் கூடப் பருகவில்லை.... எத்தனையோ பேர் இறந்து விட்டார்களே என்று நான் கடுமையான கோபத்தில் இருந்தேன், கண்ணீர் எனது கண்களிலிருந்துப் பெருகி ஓடியது..... ஆனால் எனது பலத்தைக் காட்ட ஆரம்பித்ததும்.... திட்ட ஆரம்பித்ததும்... அமைதியாக இருங்கள் எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொன்னார்.... எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொல்வதன் அர்த்தம் என்ன?.....அவைகள் எல்லாமே புரிந்தது, புரிந்து விட்டது.....!


நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

அன்னையர் தினம்







பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில்பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறுபரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது'தாய்' என்ற ஸ்தானமாகும்.

வணிகமயமாக்கப்பட்ட அன்னையர்தினம்

பல்வேறு சர்வதேச தினங்களைப் போன்றே அன்னையர் தினமும் வணிகமயாக்கப்பட்டது. அதுவும் அன்னையர் தினம் துவக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து. யார் அன்னையர் தினத்தை துவக்கி வைத்தாரோ அவரே அதன் எதிர்ப்பாளாராகவும் மாறினார். ஆம், அன்னா ஜார்விஸ் அன்னையர் தினத்தை வணிகமயமாக்கியதற்கு எதிராக போராட ஆரம்பித்தார்.

1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினம் வணிகமயாக்கப்பட்டதைக் கண்டித்துபோராட்டம் நடத்தியதால் அமைதியை சீர்குலைத்தார் எனக்கூறி கைதுச்செய்யப்பட்டார் அவர். அன்னா ஜாரவிஸ் கடைசியாக கூறியது என்னவெனில், "இதுபோல் நடக்கும் எனத்தெரிந்திருந்தால் நான் இந்த நாளை துவங்கியிருக்க மாட்டேன். ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது." என்று.வர்த்தக ரீதியாக வெற்றிப் பெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர்தினம் மாறிவிட்டது. தேசிய விடுதிக் கூட்டமைப்பின் கணிப்பின்படி அன்னையர்தினமானது இப்பொழுது அமெரிக்காவின் உணவு விடுதிகளில் இரவு விருந்துக்குஆண்டின் பிரபல நாளாக மாறிவிட்டது.

IBIS World என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின்படி
அமெரிக்கர்கள் மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், விரும்பிய பரிசுப்
பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும், வாழ்த்து அட்டைகளுக்கு 68
மில்லியன் டாலர்களும் செலவு செய்கின்றனர்.2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்அன்னையர்தினத்தில் அன்னையர்களுக்கானமோதிரங்களின் விற்பனை அமெரிக்காவின் நகைத்தொழில் துறையின் ஆண்டுவருமானத்தில் 7.8 சதவீதத்தை பெற்றுக் கொடுத்தது கார்ப்பரேட் தாய்மார்கள்அன்னையர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் தாய்மையின் புனிதத்தைக்கெடுக்கும் தாய்மார்களின் அவலத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வாடகைத்தாய் என்ற பெயரில் அன்னிய ஆண்களின் குழந்தைகளை சுமந்து தனது புனிதமானகருவறையை கார்ப்பரேட் அறைகளாக மாற்றி வருகின்றனர் சில பெண்மணிகள். இவர்கள் தாய்மையையும் பெண்மையையும் காசுக்காக சீரழிக்கும் வெட்கங்கெட்டபெண்மணிகளாவர்.கருவறையை கழிப்பிடமாக மாற்றுபவர்கள் முறைகேடான உறவுகள் மூலம் தந்தை யார் என்று தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிய பெருமை கருவறைகளை கழிப்பிடமாக மாற்றிய பெண்மணிகளை சாரும்.தவறான உறவில் பிறந்தக் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசும் கல்நெஞ்சம்படைத்தவர்களை நாம் எவ்வாறு அன்னையர் இனத்தில் சேர்க்க இயலும்.கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள் குழந்தை என்பது இறைவனின் அருட்கொடையாகும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் தான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை  அல்லது தான் கருவறையில் சுமக்கும் குழந்தைகளை அது பெண்ணாக இருக்கும் காரணத்தினால கருவிலேயே அழிக்க நினைக்கும் பாவிகளை நினைத்தால் மனம் பதறிப்போகிறது. இவர்கள்தான் கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள். இவர்கள்குழந்தையின் அழுகுரலுக்கு பதிலாக மரண ஓலத்தை கேட்க விரும்புகிறார்கள்.

பாசிசமும் தாய்மையும்
தாயை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறிவிட்டு தாய்மையை காலில் போட்டு மிதிக்கும் கயமைத் தன்மைக் கொண்ட பாசிஸ்டுகளின் இரட்டை வேடத்தை இந்த அன்னையர் தினத்தில் அடையாளம் காட்டுவது அவசியமாகும். பாரத மாதா, கோ மாதா என எதற்கெடுத்தாலும் மாதா கோஷம் எழுப்பும் இந்தக்கயவர்கள் இந்தியாவில் நடந்த பல கலவரங்களிலும் சிறுபான்மையின தாய்மார்களின் தாய்மையை சூறையாடியவர்கள். அதன் உச்சக்கட்டம் தான் குஜராத்தில் நாம் கண்ட கோர நிகழ்வு. கெளஸர் பானு என்ற தாயின் வயிற்றைக்கிழித்து கருவறையிலிருந்த சிசுவைத் தூக்கி தீயில் போட்டு பொசுக்கிய இந்தஅரக்கர்கள் ஒரு தாய்க்குத்தான் பிறந்தார்களா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

பத்துமாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்:

''அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான்வேண்டும்'' என,   மனித நேயம் மக்கிப்போன காலக்கட்டமாக மாறி வருகிறது இன்றைய நவீன உலகம். அன்னையர் தினம் என்ற பெயரால் வருடத்தில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த 'தாய்' என்ற உறவுக்கு நாம்
பிரதி உபகாரம் செய்திட இயலாது.

தாய்மைக்கு உயர்வளித்த ஒப்பற்றக் கொள்கைதாயை தெய்வமாக மதிக்கிறோம் எனக்கூறி என போலிவேடம் போடுவதை இறை மார்க்கமான இஸ்லாம் ஏற்கவில்லை. இறைவனுக்கு நிகராக எவரும் எப்பொருளும் இல்லை என்பதுதான் இஸ்லாம் கூறும் இறைக்கொள்கை.
அதே வேளையில் அன்னயருக்கு இஸ்லாம் மனித உறவுகளில் உன்னத இடத்தை அளித்து கெளரவிக்கிறது. தாய் காலடியில்தான் சுவனம் இருக்கிறது என்ற நபிகளாரின் வாக்கு அன்னைக்கு பணிவிடைச் செய்வதன் மூலமே மரணத்திற்கு பின்னர் வரும் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்ற உயரிய தத்துவத்தை போதிக்கிறது. மிகப்பெரிய பாவங்களில் ஒன்று பெற்றோரை துன்புறுத்துவது எனக்கூறி அன்னையரை அபலைகளாக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம். நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்...) அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள்.
அன்னையானவள் இஸ்லாத்தை தழுவாவிட்டாலும் கூட அவருக்கு இவ்வுலகில் நீ மதிப்பளிதேயாக வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த மார்க்கம் தான் இஸ்லாம்.

பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய வயோதிக காலம். அவ்வேளைகளில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

"நபியே! உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்.  அவர்களை(நிந்தனையாகச்) ''சீ'' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம்(எதைக் கூறிய பொழுதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றியும் ''என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீரும் பிரார்த்திப்பீராக."
(அல்குர்ஆன் 17:23,24).

இத்தகையதொரு இஸ்லாமிய சமூக சூழலில் முதியோர் இல்லங்களுக்கு ஏது இடம்? அதனால்தான் முஸ்லிம் சமூகத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் நிலை குறைவாகவே உள்ளது. இஸ்லாமிய குடும்பங்களைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறையல்ல மாறாக
வருடம் முழுவதுமே அன்னையர் தினம் தான். அங்கு போலியான பாசாங்கான நடவடிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை. மார்க்கத்தின் வழி நின்று அன்னையரை போற்றுவோம்!

நன்றி : J.நிசார் அகமது (P.T.M)