Friday, February 26, 2010

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.
இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதை முழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.
மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்





பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அஸ்ஸலாமு அலைக்கும்,


புகைப்படத்துடன் வந்து


பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!




அசைக்காத தலையை


சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!



நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;


கண் இமைக்கும் நேரத்தில்


கல்யாணமும் முடிந்துவிட்டது!!



முழுதாய் புரிவதற்க்குள்


முடிந்து விட்டது உன் விடுப்பு!



எடுத்து சென்றாய் என் இதயத்தை


கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!



பத்தே நாட்களின் வாழ்க்கை


பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!



பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்


பலிகடாயாய் நான்!


என் அழுகை கூட


ஐந்து விரல்களுக்கு நடுவே!



வறண்டுப் போன கண்களும்


இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;


ஆறுதல் என வந்தவர்களெல்லாம்


வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!


அயல் நாட்டில் இருப்பதெல்லாம்


உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!




கெஞ்சினேன் கொஞ்சினேன்


வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;


ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!



துக்கம் தொண்டையை அடைக்க;


உறுண்டு வந்த கண்ணீரையும்


ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே


உரைத்தேன் - இருந்திருக்கலாம்


முதிர்கன்னியாகவே!!!!