Wednesday, March 31, 2010

உயிர்கொல்லி காதலுக்கெதிரான விழிப்புணர்வு தேவை...

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதாரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.


பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

      ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது.  என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்ட வேண்டும்.

தொகுப்பு: எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

> > திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

> > வாழ்வின் அர்த்தம்  புரிந்து வாழலாம்! 

> > சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு            ஓடுகிறாய்! 

 என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது 
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல....
 மல்லிகைப்பூ  தந்துவிட்டு  மன்றாடுகிறாய்!

> > பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...

> > மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! 

> > அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...  பதறி எழுந்து நிலை.

> உணர்ந்து சிரிக்கிறாய் ! கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையைபோல அழுகிறாய் !


> > மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

> > கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்... அழுவதும்...அணைப்பதும்...கண்டிப்பதும்...

> > கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா

> > "அடி கள்ளி "..... இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

> > எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
> > எல்லாமே கனவா.......?  கணவனோடு இரண்டுமாதம்....கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> > 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
 2 வருடமொருமுறை கணவன்...

> > நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

 நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
 நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்  திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... 

> > வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்  விட்டுகொடுத்து...தொட்டு பிடித்து... தேவை அறிந்து... சேவை புரிந்து... உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து....தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு.

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

 இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்

 
> பரிமாறிக்கொள்ளவேண்டும்  இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு

> உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

> > தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

> > எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

> > இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

> > விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

> > பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

> > நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

> > அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

> > விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> > பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய்

> > சென்றாயே?

> > பாலையில் நீ வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய்

> > போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த

> > புகைப்படம் அனுப்புகிறாய்!

> > உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது -                                                என் வாழ்க்கையல்லவா..? விழித்துவிடு கணவா!> விழித்து விடு -

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!

> > விசாரித்து விட்டு போகாதே என் கணவா விசா ரத்து செய்துவிட்டு   வா!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம்                        புரிந்து வாழலாம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் குறிப்பிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்' என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி 2006 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு உற்பத்தியை தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் கொள்கையின் கீழ் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பூதலூர், மதுக்கூர், ஒரத்தநாடு , பாபநாசம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருப்பணந்தாள், திருவையாறு, திருவோணம் ஆகிய யூனியன் பகுதிகள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் ரூபாய் 25 லட்சம் வரை இயந்திர தளவாடங்களில் முதலீடு செய்துள்ள நுண் தொழில்களுக்கு இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியம், உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து மூன்று ஆண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியம் ஆறு ஆண்டுக்கு கணக்கிடப்பட்ட மதிப்புக்கூட்டு வரிக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியம், பின்தங்கிய ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்திற்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் ஆகியவை வழங்கப்படும்.

பின்தங்கிய ஒன்றிய பகுதிகளில் தொடங்கப்படும் நுண் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் தொடங்கப்படும் விவசாயம் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தப்படும் தொழில்களுக்கும் இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் 25 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத வேலை வாய்ப்பு பெருக்க மானியமாக ரூபாய் ஐந்து லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறன் படைத்தோர் மற்றும் திருநங்கையரால் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத கூடுதல் முதலீட்டு மானியம், ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து மூன்றாண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியமும், பிற்படுத்தப்பட்ட ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்துக்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீத மானியமும் வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியிலும் அமைக்கப்படும் மின் மற்றும் மின்னனுப்பொருட்கள் தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்து பொருட்கள், சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைக்ள், மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள், விளையாட்டு கருவிகள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய சிறப்பு வகை உற்பத்தி இனங்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திரங்கள், தளவாடங்களின் மதிப்பில் 15 சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் 30 லட்சத்துக்கு மிகாமல் மானியமாக வழங்கப்படும்.இவைகள் தவிர புதிதாக வாங்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மான்யம் வழங்கப்படும். கூடுதல் விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மைய மேலாளர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொலைபேசி எண் 255318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பா


உறவுகளில் தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

வாழ்த்துக்க‌ளோடு,
தங்கப்பா...