Saturday, April 10, 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?



அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.



நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.



முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.


அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்

Mobile No : மொபையில் எண்

Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்

Father's Name: தந்தை பெயர்

Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்



[] கண்டிப்பாக எழுதவும்

[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)


ரேசன் கார்டு

குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

வாக்காளர் அடையாள அட்டை

வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)

Thanks to Mr.Akbar ali (OPM)


இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டதா?

Posted on ஜனவரி 10, 2010 by masdooka

 ஜாகிர் நாய்கின் பதில்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

இஸ்லாம் என்ற வார்த்தை ‘ஸலாம்’ என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ஸலாம்’ என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( De Lacy O’Leary) யின் கருத்து.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ’லியரி ( De Lacy O’Leary) எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’ (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.’

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians).

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

ஷார்ஜாவில் வேட்டி அணிய தடை? Sharjah bans South Asian attire lung i in public


ஷார்ஜாவில் வேட்டி அணிய தடை? Sharjah bans South Asian attire lung i in public

ஷார்ஜாவில் சாரம்(வேட்டி) அணிய தடை?

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில், பொது இடங்களில் சாரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் சாரம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பலர், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணி புரிகின்றனர். இவர்கள் பொது இடங்களில் சாரம் அணிந்து சென்று வந்தனர்.

கடந்த வாரம் ஷார்ஜாவில் சாரம் அணிந்து சென்ற ஆசிய நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள தெற்காசிய நாட்டவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் சாரம் அணிந்து சென்றவரை போலீசார் ஏன் கைது செய்ய வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரபு நாடுகளை பொறுத்தவரை உடல் முழுக்க மறைக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். ‘கைது செய்யப்பட்ட நபர் சாரம் இருபுறமும் தைக்காமல் வேட்டியை போல அணிந்து சென்றிருப்பார். இதனால், காற்றில் சாரம் பறக்கும் போது அவரது கால்கள் மற்றவர்கள் பார்க்கும் படியாக தெரிந்திருக்கும். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்’ என, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர், வீட்டைத் தவிர வெளியிடங்களில் சாரம் அணிவதில்லை, என தெரிவித்துள்ளார்.
thanks mannadi kakka

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.


சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

இலவச பயிற்சி திட்டம், சமூகம், தமிழ்நாடு அரசு.


வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

1. Hardware and Networking ,2 C, C++ 3,DTP, 4,Tally, with MS office

(10-வது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).

இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,


சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,



பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,



தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.


5. Multimedia @ Animation
(10-வது வகுப்பில் தேர்ச்சி (ம) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)


6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)

இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.



1) பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/லிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2) மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)

சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)



1) சாதிச் சான்றிதழ் நகல்

2) குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.

3) வருமான சான்றிதழ் நகல்

4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.

நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும்.



பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள்

CSC ComputerEudcation(தொலைபேசி எண் Chennai 044 – 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.

IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.

Hindustan Sorfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில்.

Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.

Students Software training (தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.

கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரியில் படித்து முடித்தவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழை (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) தொலைத்துவிட்டாலோ, அல்லது இயற்கை சீற்றங்களின்போது அழிந்துவிட்டாலோ, மாற்று சான்றிதழ் பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.

மாற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கல்லூரி முதல்வரே செயல்படுகிறார்.

மாற்று சான்றிதழ் தொலைந்துவிட்டால் அது பற்றி அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பின்னர் சான்றிதழ் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்கு காவல் அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை பெற்ற பின் மாற்று சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் (தாசில்தார்)மனு மூலம் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்துவிட்டது உண்மை என சான்று அளிப்பார்.

பின்னர் காவல் நிலையம் கொடுத்த சான்றிதழ், தாசில்தார் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணம் ஆகியவற்றுடன் கல்லூரி முதல்வருக்கு மாற்று சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மாற்று சான்றிதழ் வழங்குவார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை தொலைத்துவிட்டால் கடைசியாக படித்த கல்லூரி முதல்வருக்கு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மதிப்பெண் சான்றிதழ் நம்பர், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றை சரிபார்த்து அவர் வழியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை எழுதுவார். அத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்குவார்.

ஓ! பத்திரிக்கையாளர்களே உங்கள் பேனாக்களை பிணத்தின் கையில் கொடுங்கள்.

ஓ! பத்திரிக்கையாளர்களே உங்கள்
பேனாக்களை பிணத்தின் கையில் கொடுங்கள்.

காரிருள் அகத்தில் நல்ல கதிர் ஒளி நீதான் என பத்திரிக்கையை புகழ்ந்தார் பாவேந்தர். காரிருளை அகற்ற வேண்டிய பத்திரிக்கைகள் கலவர தீ மூட்டி குளிர்காய்வதில் அவ்வப்போது ஈடுபடுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. இஸ்லாத்தின் கடவுள் தத்துவத்தை புரியாமல் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் வரைந்து முஸ்லீம்களை காயப்படுத்துவதும் பிறகு மன்னிப்புகோரும் அயோக்கியத்தனத்தை அறங்கேற்றுகிறது சில பத்திரிக்கைகள்.

இறைவனுக்கு இனைவைத்தல் ஆகாது என்பது இஸ்லாத்தின் கடவுள் கோட்பாடு. இறைவனுக்கு இணையாக எதை வைப்பது? அதற்கு முடிவு ஏது? இப்படி இறைவனுக்கு இனைவைக்க தொடங்கியதால் நம் தேசத்தில் கடவுள்களின் எண்ணிக்கையும் கலவரங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆதித்தமிழர்களின் கடவுள் கோட்பாடு திருமூலரின் ஒன்றே குலம் ஒருவனே தேவன். பேரறிஞர் அண்ணா,"கடவுளை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்றார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று வான்புகழ் கொண்ட வள்ளுவன் குறள் தீட்டினான். "நாதமுனி இருக்கையில் நட்டகல்லும் பேசுமோ?" என்று சிவவாக்கிய சித்தர் கடவுளை பற்றி செப்புகிறார். வானாகி, வளியாகி, ஒளியாகி என்று கடந்த பரம்பொருளை கடவுளாக பாவித்து மாணிக்கவாசகர் பாடினார். கந்தழி என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் வருகிறது. கந்தழி என்றால் கடந்தவன் என்று பொருள் கடந்த பரம்பொருளை கடவுளாக தமிழர்கள் வணங்கியதை மயிலை வெங்கடசாமி குறிப்பிடுகிறார்.
அன்பை மட்டும் பேசினார் புத்தர். கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாக வணங்கப்படுவதை இன்று பார்க்கிறோம். மகாவீரர் கடவுளாக வழிபடுவதை பார்க்கிறோம். கடவுளின் அருள் வேண்டி புகழ்பாடிய ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும், பூஜை புனஸ்காரம் செய்யபடுகிறது. ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று பாரதி ஒரு கடவுள் தத்துவத்தை பாடினார். அந்த பாரதி இன்று கடவுளாக வழிபடுவதை பார்க்க முடிகிறது. கற்பம் தறிப்பதைக் கூட மனிதன் நிருத்திகொண்டான். ஆனால் கடவுளை பிரசவிப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. ஆதி தமிழனின் கடவுள் கோட்பாட்டை இன்றைய தமிழன் புரிந்து கொள்ளாத காரணத்தினால் ஜாதிகளும், பேதங்களும் சண்டை சச்சரவுகளும் கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படுவதை பார்க்க முடிகிறது.

இஸ்லாத்தில் இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது. அப்படி இணைவைத்தால்? யாரை இணைவைப்பது என்று கேள்வி எழுகிறது. யார்? மந்திரம் ஓதுவது என்ற சிக்கல் எழுகிறது. தமிழிலா? அல்லது சமஸ்கிருதத்திலா? என்ற சர்ச்சை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோவில் பிரச்சனை கோர்ட்ட் வரை சென்றிருப்பதை பார்க்க முடியும். மனித மனத்தின் பலகீனத்தை புரிந்துகொண்ட நபிகள் நாயகம் அவர்கள் அன்பு மதிப்பாகி, மதிப்பு பக்தியாகி, பக்தி முக்தியாகி இறைவனுக்கு நிகராக யாரும் என்னை வைத்து விட கூடாது. கடவுளாக பூஜை புனஸ்காரம் செய்து விடக் கூடாது என்பதற்காக என்னை உருவமாகவோ, படமாகவோ, சிற்பமாகவோ, கர்ட்டூனாகவோ, வரைவதை கடுமையாக தடுத்தார்கள். இன்றுவரை யாரும் செய்யாத காரியத்தை, முஸ்லீம்கள் அனுமதிக்காத காரியத்தை சில கயமைத்தன பத்திரிக்கைகள் காழ்புணர்ச்சியோடு வெளியிடுவது கண்டனத்திற்குரியது.

மனித குலத்தின் எதிரிகள் சமூக நல்லிணக்கத்தை உடைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கின்றனர். பிறர் மதத்தின் அடிப்படை நம்பிக்கையை, கொள்கையை, உணர்வை புரிந்து கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன், என்று எழுதுவது, கர்ட்டூன் வரைவது, பதற்றத்தையும், கொந்தளிப்பையும், பல் சமய நண்பர்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்.அன்று ஜெர்மானிய எழுத்தாளர்கள். தங்கள் எழுதுகோலால் உடைந்த ஜெர்மனியை ஒன்றாக்கினார்கள். இங்கும் சில எழுத்தாளர்கள், காயம் தேடும் காக்கைகளாக தமிழ்நாட்டில் வலம் வருகிறார்கள். ஓ! எத்தி பிழைக்கும் எச்சில் எழுத்தாளர்களே, உங்கள் பேனாவிற்கு வலிமை இருந்தால், தேச ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எழுதுங்கள்.இல்லை என்றால் வேசித்தனம் புரியும் உங்கள் நீச பேனாவை பிணத்தின் கையில் கொடுங்கள் அங்கேயாவது அது பெருமையாக இருக்கட்டும்..
இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி(IDMK)