Tuesday, March 16, 2010

இறை மறுப்பு போலி என்பதற்கு, இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கு..

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 155


இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்! 6:155.


--------------------------------------------------------------------------------



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


இறை மறுப்பு போலி என்பதற்கு,

இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கு,

நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார் தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட படித்த பண்பாளர் சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து மத வேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.


எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். தினமனி ரம்ஜான் மலர் 2003.


உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 பக்கம் 33.

4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி வந்துள்ளனர்.

இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/

மறுமை


உயிரில்லாத ஒன்றிலிருந்து (களி மண்ணிலிருந்து) படைக்கப்பட்ட முதல் மனிதரின் உயிர் அணுக்களிலிருந்து உலகம் முழுவதும் மனித இனத்தை பரவச்செய்த இறைவனுக்கு அவர்கள் மொத்தமாக மரணித்தப் பின்னர் ஒன்றுக் கூட்டி எழுப்புவது கடினமானதல்ல என்பதை சிந்தித்தால் போலியான இறைமறுப்பிலிருந்து விடுபட்டு உறுதியான இறைநம்பிக்கையின் பால் மாறி விடலாம்.



Ø 77. மனிதனை விந்திரிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.


Ø 78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.


Ø 79. ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!


Ø 80. அவன் பசுமையான மரத்திரிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிரிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.


Ø 81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.


Ø 82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.


Ø 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அத்தியாயம்-36


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.


thanks அதிரை ஏ.எம்.ஃ


அந்தமான் சிறைச்சாலையும் முஸ்லிம்களும்....

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால்



அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)






அலமா பஜல் ஹக் - உத்திரப் பிரதேசம்


லியாகத் அலி - உத்திரப் பிரதேசம்


குலாப் கான் - மத்தியப் பிரதேசம்


முஹிபுல்லாஹ் - மத்தியப் பிரதேசம்


மிர் ஜாபர் அலி தன்ச்வாரி - மத்தியப் பிரதேசம்


நூரா - மத்தியப் பிரதேசம்


சிராஜுதீன் - மத்தியப் பிரதேசம்


கையும் கான் - மத்தியப் பிரதேசம்


மௌலவி சயீத் அலாவுதீன் - ஹைதராபாத்


மது மாலிக் - அஸ்ஸாம்


ஷேக் பர்மூத் அலி - அஸ்ஸாம்






வஹாபி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1860 - 1870)






அஹமதுல்லாஹ்


அமிருதீன்


இப்ராகிம் மண்டல்


முஹம்மது சேர் அலி


யஹ்யா அலி






மாப்பிளா புரட்சியில் (கேரளா ) ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1922 - 1924)






நெல்லிப்பரம்பன் அலவி ஹாஜி


கொலபரம்பன் குஞ்சலாவி


கொழிச்செரி கோயா குட்டி


அம்பட்டுபரம்பன் சைதலிப்பா


கயக்கட்டிபரம்பில் குன்ஜெனி


மசிங்கள் ரயின்


குதுகள்ளன் குஞ்சிரா


சுந்காத் அதான்


வரியாத்வளப்பில் அஹம்மத் குட்டி


மட்டும்மால் அஹம்மத் குட்டி


பொயிக்குன்னான் மரைக்கார்


மசின்சேரி அலவி


பொகத் கொயமி


குஞ்சிக் காதர் மொல்லா


முகரி குஞ்சயம்மு


குன்ஹி மொஹிதீன் குட்டி


பூவகுண்டில் அலவி


குஞ்சிடு


அரிபார பாகர்


மட்டும்மால் மரைக்கார்


குட்டி ஹசான்






அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1909 - 1921)





அலி அஹ்மத் சித்திகி - பஞ்சாப்


முஸ்தப்பா ஹுசைன்






அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1932 - 1938)






அப்துல் காதர் சௌத்ரி - மேற்கு வங்காளம்


சிராஜுல் ஹக் - மேற்கு வங்காளம்


முஹம்மது இப்ராகிம் - மேற்கு வங்காளம்








thanks
Rajaghiri Gazzali

ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...


ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

வேகமான இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். மனித வாழ்கையின் முழு பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வு! என்ற நிலை எல்லா தரப்பு மக்ககளிடமும் ஏற்பட்டுள்ளதையும் பிரச்சனைகளை தீர்க்க அல்குர்ஆனும், அஹாதிஸ்களுமே போதிய ஆதாரமாகும். வேறு மூலங்கள் தேவையில்லை என்பதை மக்கள் உணர துவங்கியுள்ளார்கள். அறிவுப்பூர்வமான சட்டதிட்டங்களை கொடுத்து மனிதனை மேன்மைப்படுத்தும் இஸ்லாமிய கருவூலங்கள் ஏனோ கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களிடம் கொடுக்கப்படவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறி வருகிறது. தெளிந்த கண்ணாடியாக இருந்து இஸ்லாம் மீது படிந்த தூசுகள் அகற்றப்பட்டு அந்த கண்ணாடி ஒளிவீச துவங்கியுள்ளது. அறிவை தேடி அலையும் மனிதனுக்கு அவன் தேவைக்கு அதிகமான அதேசமயம் அவசியமான அறிவைப் புகட்டக் கூடிய கலாச்சலையான அல்குர்ஆன், அஹாதீஸ்கள் சிந்தனைக்கு விருந்தாக அறியாமை மூட நோய்களுக்கு மருந்தாக உலா வர துவங்கியுள்ளன.


இஸ்லாத்தின் மூல ஆதாரங்களை மக்கள் எளிதாகப் புரிந்துக்கொள்ளும் வகையில் எந்த அளவிற்கு இலகுபடுத்திக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கான முயற்சிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க மிக முக்கியமாக இஸ்லாம் மனிதனிடம் எதை போதிக்கிறது? எதை விரும்பிகிநது? என்பது மக்களுக்கு எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதை சிந்தனையில் நிறுத்தி இறைமறையையும் நபிமொழிகளையும் அணுகுவோமேயானால் மனித வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக ஆறு அம்சங்களை இஸ்லாம் கூறுவதை காணலாம்.

அ) மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் தக்வா -இறையச்சம்

ஆ) தக்வா (இறையச்சம்) விற்கு பிறகு அவன் இணைந்து கொள்ள வேண்டிய பேரியக்கம்.


இ) அந்த இயக்கத்திற்குட்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள்.

ஈ) அவன் இணைந்த இயக்கம் அவனுக்காக தெனிவுபடுத்தும் இருவழிகள் 1) இறை நேசவழி 2)'தாகூத்' தீயவழி

உ) தக்வா (இறையச்சதை)வை நிராகரிக்கும் மனிதறிவுகள் தொடுக்கும் கேள்விகளும். அதற்கான பதிலுரைகளும் அடங்கியுள்ளன்.

ஊ) பொதுப்படையான அறிவுரைகள்.

இந்த ஆறு அடிப்படைகளையும் சந்தேகமின்றி உணர்வது அவசியமாகும்.


தலைமை தேவை இதுவே!


மனிதன் தன்னை தானே உருவாக்கிக் கொள்ளவில்லை அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவும் முடியாது. ஏதோ ஒரு நிலையிலேயே அவன் உருவாக்கப்படுகிறான். இப்படி உருவாக்கப்பட்ட மனிதன் நாளடைவு வளர்ச்சியில் அவன் மனம் விரும்பும் ஏதாவது ஒரு கடவுள் சக்திக்கு தன்னை அடிமைபடுத்திக்கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனாலும் அவன் தேர்ந்தெடுக்கும் கடவுள் சக்தியை அவன் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பது நலம்.


கடவுள் சக்தி என்பது அறிவுக்கு அப்பார்பட்டது. உணர்வுக்கு கட்டுப்பட்டது. எனவே அறிவை கொண்டு மட்டும் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரு சிலர் கூறினாலும் அதை சரியாக அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மை

கடவுளுடைய உருவை, அமைப்பை, தோற்றத்தை, வளர்ச்சியை, தற்கால நிலையை இதுபோன்ற விஷயங்களை தான அறிவை கொண்டு நிர்மாணிக்க முடியாது. ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிவைக் கொண்டு நிற்ணயித்து விடலாம்.

ஒரு மையப் பொருள் இல்லாமல் எந்த வேலையும் இந்த உலகில் நடக்காத என்பது திட்டவட்டமாக உணர்த்தப்பட்ட ஒன்று. விதைகள் இல்லாமல் மரத்தையோ, சுவாசம் இல்லாமல் மனிதனையோ வளர்க்கவும், இயக்க - இயங்கவும் முடியாது. இதுவே மெய்ப்பொருள் எனப்படும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மெய்ப்பாருள் இருக்கும் போது இவையனைத்தையும் உள்ளடக்கம் செய்த ஒரு மெய்ப் பெருள் இருக்கிறது. இருந்தேயாக வேண்டும் என்பதை நம் அறிவு ஒப்புக் கொள்கிறது. அந்த மைய்யப் பொருளையே கடவுள், இறைவன் என்று அழைக்கிறோம். இந்நிலையில் சிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நாம் நமது இறை கொள்கையை திடப்படுத்திக் கொள்ள முடியும்.


இங்குதான் பகுத்தறிவு தோல்வியை தழுவுகிறது. கடவுளின் தோற்றம், வளர்ச்சியை நாம் தெரிந்துக் கொள்வதால் மனித வாழ்க்கைக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை . மாறாக அந்த கடவுள் அல்லது இறைவன் நிர்ணயம் செய்து அந்த வழியை பின்பற்றி நடப்பதே நமது வாழ்க்கையை சரியான வழியில் செப்பனிடுவதாகும்.

இதற்கு ஓர் உதார்ணம் கூறலாம். 'மாவிதை' யை எடுத்துக் கொள்வோம்!


பகுத்தறிவு மீது கனத்த நம்பிக்கையுள்ள ஒருவன் அந்த விதையை கையில் எடுத்துக் கொண்டு 'இது' எப்படி மரமாகிறது இந்த விதைக்குள் இது பெருத்த மரமாக வளர்வதற்குரிய அறிகுறிகள் இருக்கின்றனவா? இலைகளின் நீளம் , பூக்களின் வீரியம் , காய்களின் எண்ணிக்கை, பழங்களின் கனம் போன்றவை எந்த அளவு உள்ளது? என்று சிந்திக்கத் துவங்கினால் அவன் ஆயுட்காலம் முடிந்தாலும் விடைகான முடியாது "மாவிதை" யை இரண்டாக பிளந்து அதன் உள்ளேயுள்ள பொருள்களை ஆராய்ச்சி செய்தாலும் அவன் எண்ணத்தில் எழும் கேள்விகளுக்கு தெளிவு ஏற்படாது. இப்படிப்பட்ட பகுத்தறிவு அவனை 'புத்தி சுவாதீனன்' என்ற நிலைக்குதான் கொண்டு போய்விடும். 'எனது பகுத்தறிவு வாதமான சந்தேகங்களுக்கு விடை கிடைத்தால்தான் இதை நடுவேன்' என்று அவன் பிடிவாதம் பிடித்தால் அந்த விதையின் மூலம் அவனுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது என்பது திண்ணம்.

அதே சமயம் வேறொரு பகுத்தறிவுவாதி இதே'மாவிதை' யை எடுத்து அதை எப்படி புதைக்க வேண்டும் 'எந்த அளவிற்கு தண்ணீர் விட வேண்டும் அது முளைத்த பின் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சிந்திக்கிறான்' நன்கு சிந்தித்து அதுபடி செயலாற்றுகிறான்' விதைக்கு உதவக்கூடிய இவனது சிந்தனையின் விளைவால் பிறகு நல்ல மகசூலை பெறலாம் ' இப்படித்தான் பகுத்தறிவின் எதார்த்ததை பிரித்தறிய வேண்டும்'

பகுத்தறிவை கொண்டு இறைவனின் தோற்றம் ' வளர்ச்சி' தற்கால சூழ்நிலையை அறிய நாடுபவன் ' மாவிதையை' கையில் வைத்துக் கொண்டு ' மலர் ' இலை' காய் ' கனி ஆகியவற்றைப்பற்றி சிந்திப்பவன் போலாவான்' அவன் தன் ஈயுள் முழுவதும் இதுபற்றி தெரிந்துக் கொள்ள நாடினாலும் எப்படி அவனுடைய முயற்சிகள் பூஜ்ஜியமாக ஆகி விடுமோ அதேபோன்று தான் இறை தோற்றம்' வளர்ச்சி மற்ற நிலைகளை ப் பற்றி சிந்திப்பதுமாகும் ' அங்கு பகுத்தறிவு' புத்தி சுவாதீனன்' என்ற நிலையை தான் ஏற்படுத்தும்'


அதே சமயம் இறைகட்டளையை ஏற்று செயல்படுவது என்பது மாவிதையை புதைத்து தண்ணீர் ஊற்றி' வளர்ந்து இறுதியில் சிறந்த லாபத்தை ஈட்டுவதற்கு ஒப்பாகும் இங்கு தான் பகுத்தறிவு அதன் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணரலாம் அதனால் தான் இஸ்லாம் இறைதோற்றத்திற்கு முக்கியத்தும் கொடுக்காமல் இறைசட்டங்களுக்கும்' திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது' இறை தோற்றம் பற்றிய சிந்தனை' தாகூத்' திய சிந்தனையாகும்' என இறை தூதரால் எச்சரிக்கை செய்யப்பட்டது'

இறை வேதத்தை நாம் ஆராய்வோமேயானால் இறைவனின் கண்ணியம்' அவனின் ஆற்றல்' அவன் மேற் கொண்டுள்ள பணி' அவனின் பண்புகள்' அவனது ஆக்ரோஷ தண்டனைகள் ஆகியவற்றைப் பற்றியே திரும்ப திரும்ப வருவதை காணலாம்' இதை விடுத்து அவனின் பிறப்பு' வளர்ச்சி நிலைகள் பற்றிய ஆக்கங்களை குர் ஆனில் எங்கும் காணமுடியாது'

தேவையான இடங்களில் அவனுக்கு நிகராக எவருமே எதுவுமே இல்லை theve is hone like unto hem என ஒட்டுமொத்தமாக உதாரணங்கள்' கற்பனைகள் அனைத்திற்கும் பதிலாளிக்கப்பட்டு விட்டன எனவே கடவுள் சத்தி அறிவுக்கு உட்பட்டது தான் அறிவை செலுத்த வேண்டிய முறையில் செலுத்தினால்'

இந்த விளக்கத்தின் மூலம் கடவுளின் தோற்றம்' வளர்ச்சிப் பற்றிய சிந்தனையில் உள்ள கோளாறுகளையும்' அவன் கட்டளைகளை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளைம் 'ஓரளவு புரிந்திருப்பீர்கள்'

இப்போது இறைவன் நம்மிடம் எதிர்பாப்பது என்ன? என்பதை காணவேண்டும்'
மனிதனிடம் '' தலைமைத் தேவையாக'' இறைவன் ஒன்றை எதிர்பார்க்கிறான்' அது ' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்பதேயாகும்' குர்ஆனின் மைய கருத்து அது மனிதனுக்கு போதிக்கும் போதனைகளில் தலைமையானது' இத்தகுல்லாஹ்' revenence god என்பதேயாகும்' இதை மனிதன் பெற்றுவிட்டால் இவன் சுபீட்சத்திற்கு வழி வகுத்துக் கொண்டான் என்பது பொருளாகும்' இந்த இறை அச்சத்திற்கு ஒரு அடிப்படையை இறைவன் கூறுகிறான் 'எதற்காக இறையச்சம் வேண்டும் ?

இந்த இறையச்சம் நன்றிக் கடனாகவோ அல்லது கூலியாகவே என்றால் இரண்டுமேயில்லை. மாறாக அதான் மனித ஈடேற்றத்திற்குரிய அளவுகோல்.


இறைவன் கூறுகிறான்:


மனித இனமே! உங்கள் 'ரப்' புக்கு பயந்து நடவுங்கள் அவன் தான் உங்கள் அனைவரையும் ஒரேயொரு ஆத்மாவிலிருந்து படைத்தான் . அந்த ஆத்மாவிலிருந்தே அதற்கு வாழ்க்கைத் துணையையும் வெளிபடுத்தினான்' அவ்விருவரிலிருந்து எண்ணில்லா ஆண்களையும் பெண்களையும் பிரபஞ்ச பெருவெளியில் பரவ செய்தான். இதன் காரணமாக' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்' (அல் குர் ஆன் 4:1)

மனிதன் 'பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம்' என்று நிலையில் இருக்கிறான் ' இது முற்றிலும் அறியாமையாகும்' எதற்காக பிறந்தோம்' ஏன் பிறந்தோம்? பிறப்பின் நோக்கம், முடிவு, இடைப்பட்ட வாழ்க்கையின் அவசியம் போன்றவற்றை சிந்திக்கும் மக்களுக்கு ' இத்தகுல்லாஹ்'' வின் பொருள் புரிந்து விடும்.

' இறைவனுக்கு அஞ்சுங்கள்' எப்படி அஞ்ச வேண்டும்' குறிப்பிட்ட வணக்க முறையில் மட்டுமா ? இல்லை

வேறு கோணத்தில் அஞ்சவேண்டும்' அதாவது அவனுக்கு அஞ்சுவதே வாழ்க்கையாக இருக்க வேண்டும்' இதை தான் மனிதனிடம் இறைவன் தலமைத் தேவையாக எதிர்பார்க்கிறான்' நாம் செய்யும் செயல் ஒவ்வென்றிலும் நமது வழிக்காட்டியாக' இத்தகுல்லாஹ்' இருக்க வேண்டும்' இந்நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு உலகம் அமைதியைப் பெற்று விடும்'

புரிந்துக் கொள்ள'


இறையச்சம் மிக்க ஒருவன் பெறும் பதவி வகிக்கிறான் அவனை கொண்டு முடிய வேண்டிய வேலைக்காக சிலர் அவனை அணுகுகிறார்கள்' இவர்கள் நாடும் வேலைக்காக அவன் அவர்களிடம்' லஞ்சம்' கேட்டு கை நீட்டமாட்டான்' ஏனெனில் உழைக்காமல் வரும் பணம் பற்றிய அச்சம் அவன் மனதில் குடி கொள்ளும்' இறை தண்டனைக்கு அஞ்சுவான் ' இந்த ஒரு உதாரணத்தைக் கொண்ட இன்று பிரபஞ்சத்தில் நடக்கும் சரி நிலை' தவறு நிலைகளை கணித்து விடலாம்' எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் மனிதன் கண்ணியவான் ஆவதற்கு இறையச்சமே பிரதானமாக இருக்கிறது.

எவன் தூய்மையான அச்சமுள்ளவனாக இருக்கிறனோ அவன் தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன் (அல்குர்ஆன் 49: 13)

மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை வெகு அழகாக ஆக்கப்பட்டுள்ளது' திரும்பும் திசையெல்லாம் இன்பமயமான இடங்கள் இயற்கை, பெண்கள், பொன் ஆபரணங்கள் மற்றும் விவசாயம், மிருகங்கள் இவைகளனைத்தையும் மனிதன் நேசிக்கிறான். இவைகளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்கிறான். அவைகளுக்கு மத்தியில் உல்லாசமாக இருக்க வேண்டும் என ஆவல் கொள்கிறான் ' இஸ்லாமும் இதை கூடாது என்று சொல்லவில்லை' அனுபவிக்க சொல்லி வரவேற்கிறது' அதே சமயம் அதை விட சிறந்தததையும் குர் ஆன் எடுத்தோதுகிறது'

பெண்கள், ஆண்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்டக் குதிரைகள்' ஏனைய கால் நடைகள்' சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ஆசை மனிதனுக்கு அழகாகப்பட்டுள்ளது இவைகளைல்லாம் அழிய போகும் உலக வாழ்வின் சுக பொருள்களாகும்' அல்லாஹ்விடம் தங்குமிடம் உண்டு' இவற்றைவிட சிறந்த, மேன்னையான செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? என்று நபியே நீர் கேளும்' அதுதான் தக்வா. இறையச்சத்தின் மூலம் அவர்களுடைய இறைவனிடத்தில் சுகன சோலைகள் உண்டு' அச்சோலைகளுக்குக் கீழ் வற்றா நீரருவிகள் ஓடிக் கொண்டே இருக்கும்' இத்தகுல்லாஹ்வை திடமாக ஏற்றுக் செயலாற்றியவர்களுக்கு தூய துணைவர்களும் உண்டு (அல்குர்ஆன் 3:14,15)


இப்படி இறைவன் எச்செயலிலும் இறையச்சத்தையே பிரதானமாக எடுக்க சொல்கிறான். இறைபயம் அற்ற நிலையை இந்த உலகம் முழுமையாக ஏற்றுக் கொண்டால் பிறகு உலகம் சின்னாபின்னாப் படுத்தப்பட்டு விடும்


இன்று பிரபஞ்சமெங்கும் நடக்கும் வன் செயல்களுக்கு காரணம் தன்னை படைத்தவன் பற்றிய அறியாமையும் அவனிடம் பெறப்போகும் கொடூரமான தண்டனையையும் உணர திருப்பதேயாகும். மனிதனின் தன் மீது,தன் பலத்தின் மீது தன் குலத்தீன் மீது ,தன் சொத்தின் மீது, கொண்ட ஆர்வம் அவனை இறையச்சமற்ற நிலைக்கு ஆக்கிவிடுகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. மானிடப் பெருக்கத்தின் ஆரம்ப முதலே நடக்க துவங்கிவிட்டது. இறைபயம் இல்லாத மனிதனின் கர்வநிலை அவனை எந்த செயலையும் செய்து காட்ட தூண்டி விடுகிறது. தன் கூடப் பிறந்த சகோதரணையே தன் ரத்தத்தையே கொலை செய்யும் அளவிற்கு மனிதன் வந்து விடுகிறான்.

இறையச்சமில்லாததால் ஏற்பட்ட கொலை நிகழ்ச்சி இறையச்சமிருந்ததால் அதை மன நிறைவோடு ஏற்றக் கொண்ட நிகழ்ச்சி இன்றைய தக்வாதாரிகளுக்கு தக்க ஆதாரமாகும்.

Thanks,
Madukkur Thawheed Charitable Trust
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை


நீதிமன்றத்தில் நித்தியானந்தா......


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..



சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..



கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..



நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..



குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...



சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை. அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....



உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக.... நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..



நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..



இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,



ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...
என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலே உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.



ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்.... ஓடினேன்



நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......
ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...



எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.



என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.



செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?



நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பி கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??



இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.