Tuesday, March 16, 2010

இறை மறுப்பு போலி என்பதற்கு, இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கு..

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 155


இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்! 6:155.


--------------------------------------------------------------------------------



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


இறை மறுப்பு போலி என்பதற்கு,

இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கு,

நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார் தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட படித்த பண்பாளர் சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து மத வேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.


எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். தினமனி ரம்ஜான் மலர் 2003.


உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 பக்கம் 33.

4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி வந்துள்ளனர்.

இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/

மறுமை


உயிரில்லாத ஒன்றிலிருந்து (களி மண்ணிலிருந்து) படைக்கப்பட்ட முதல் மனிதரின் உயிர் அணுக்களிலிருந்து உலகம் முழுவதும் மனித இனத்தை பரவச்செய்த இறைவனுக்கு அவர்கள் மொத்தமாக மரணித்தப் பின்னர் ஒன்றுக் கூட்டி எழுப்புவது கடினமானதல்ல என்பதை சிந்தித்தால் போலியான இறைமறுப்பிலிருந்து விடுபட்டு உறுதியான இறைநம்பிக்கையின் பால் மாறி விடலாம்.



Ø 77. மனிதனை விந்திரிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.


Ø 78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.


Ø 79. ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!


Ø 80. அவன் பசுமையான மரத்திரிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிரிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.


Ø 81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.


Ø 82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.


Ø 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அத்தியாயம்-36


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.


thanks அதிரை ஏ.எம்.ஃ


அந்தமான் சிறைச்சாலையும் முஸ்லிம்களும்....

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால்



அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)






அலமா பஜல் ஹக் - உத்திரப் பிரதேசம்


லியாகத் அலி - உத்திரப் பிரதேசம்


குலாப் கான் - மத்தியப் பிரதேசம்


முஹிபுல்லாஹ் - மத்தியப் பிரதேசம்


மிர் ஜாபர் அலி தன்ச்வாரி - மத்தியப் பிரதேசம்


நூரா - மத்தியப் பிரதேசம்


சிராஜுதீன் - மத்தியப் பிரதேசம்


கையும் கான் - மத்தியப் பிரதேசம்


மௌலவி சயீத் அலாவுதீன் - ஹைதராபாத்


மது மாலிக் - அஸ்ஸாம்


ஷேக் பர்மூத் அலி - அஸ்ஸாம்






வஹாபி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1860 - 1870)






அஹமதுல்லாஹ்


அமிருதீன்


இப்ராகிம் மண்டல்


முஹம்மது சேர் அலி


யஹ்யா அலி






மாப்பிளா புரட்சியில் (கேரளா ) ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1922 - 1924)






நெல்லிப்பரம்பன் அலவி ஹாஜி


கொலபரம்பன் குஞ்சலாவி


கொழிச்செரி கோயா குட்டி


அம்பட்டுபரம்பன் சைதலிப்பா


கயக்கட்டிபரம்பில் குன்ஜெனி


மசிங்கள் ரயின்


குதுகள்ளன் குஞ்சிரா


சுந்காத் அதான்


வரியாத்வளப்பில் அஹம்மத் குட்டி


மட்டும்மால் அஹம்மத் குட்டி


பொயிக்குன்னான் மரைக்கார்


மசின்சேரி அலவி


பொகத் கொயமி


குஞ்சிக் காதர் மொல்லா


முகரி குஞ்சயம்மு


குன்ஹி மொஹிதீன் குட்டி


பூவகுண்டில் அலவி


குஞ்சிடு


அரிபார பாகர்


மட்டும்மால் மரைக்கார்


குட்டி ஹசான்






அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1909 - 1921)





அலி அஹ்மத் சித்திகி - பஞ்சாப்


முஸ்தப்பா ஹுசைன்






அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1932 - 1938)






அப்துல் காதர் சௌத்ரி - மேற்கு வங்காளம்


சிராஜுல் ஹக் - மேற்கு வங்காளம்


முஹம்மது இப்ராகிம் - மேற்கு வங்காளம்








thanks
Rajaghiri Gazzali

ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...


ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

வேகமான இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். மனித வாழ்கையின் முழு பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வு! என்ற நிலை எல்லா தரப்பு மக்ககளிடமும் ஏற்பட்டுள்ளதையும் பிரச்சனைகளை தீர்க்க அல்குர்ஆனும், அஹாதிஸ்களுமே போதிய ஆதாரமாகும். வேறு மூலங்கள் தேவையில்லை என்பதை மக்கள் உணர துவங்கியுள்ளார்கள். அறிவுப்பூர்வமான சட்டதிட்டங்களை கொடுத்து மனிதனை மேன்மைப்படுத்தும் இஸ்லாமிய கருவூலங்கள் ஏனோ கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களிடம் கொடுக்கப்படவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறி வருகிறது. தெளிந்த கண்ணாடியாக இருந்து இஸ்லாம் மீது படிந்த தூசுகள் அகற்றப்பட்டு அந்த கண்ணாடி ஒளிவீச துவங்கியுள்ளது. அறிவை தேடி அலையும் மனிதனுக்கு அவன் தேவைக்கு அதிகமான அதேசமயம் அவசியமான அறிவைப் புகட்டக் கூடிய கலாச்சலையான அல்குர்ஆன், அஹாதீஸ்கள் சிந்தனைக்கு விருந்தாக அறியாமை மூட நோய்களுக்கு மருந்தாக உலா வர துவங்கியுள்ளன.


இஸ்லாத்தின் மூல ஆதாரங்களை மக்கள் எளிதாகப் புரிந்துக்கொள்ளும் வகையில் எந்த அளவிற்கு இலகுபடுத்திக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கான முயற்சிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க மிக முக்கியமாக இஸ்லாம் மனிதனிடம் எதை போதிக்கிறது? எதை விரும்பிகிநது? என்பது மக்களுக்கு எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதை சிந்தனையில் நிறுத்தி இறைமறையையும் நபிமொழிகளையும் அணுகுவோமேயானால் மனித வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக ஆறு அம்சங்களை இஸ்லாம் கூறுவதை காணலாம்.

அ) மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் தக்வா -இறையச்சம்

ஆ) தக்வா (இறையச்சம்) விற்கு பிறகு அவன் இணைந்து கொள்ள வேண்டிய பேரியக்கம்.


இ) அந்த இயக்கத்திற்குட்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள்.

ஈ) அவன் இணைந்த இயக்கம் அவனுக்காக தெனிவுபடுத்தும் இருவழிகள் 1) இறை நேசவழி 2)'தாகூத்' தீயவழி

உ) தக்வா (இறையச்சதை)வை நிராகரிக்கும் மனிதறிவுகள் தொடுக்கும் கேள்விகளும். அதற்கான பதிலுரைகளும் அடங்கியுள்ளன்.

ஊ) பொதுப்படையான அறிவுரைகள்.

இந்த ஆறு அடிப்படைகளையும் சந்தேகமின்றி உணர்வது அவசியமாகும்.


தலைமை தேவை இதுவே!


மனிதன் தன்னை தானே உருவாக்கிக் கொள்ளவில்லை அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவும் முடியாது. ஏதோ ஒரு நிலையிலேயே அவன் உருவாக்கப்படுகிறான். இப்படி உருவாக்கப்பட்ட மனிதன் நாளடைவு வளர்ச்சியில் அவன் மனம் விரும்பும் ஏதாவது ஒரு கடவுள் சக்திக்கு தன்னை அடிமைபடுத்திக்கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனாலும் அவன் தேர்ந்தெடுக்கும் கடவுள் சக்தியை அவன் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பது நலம்.


கடவுள் சக்தி என்பது அறிவுக்கு அப்பார்பட்டது. உணர்வுக்கு கட்டுப்பட்டது. எனவே அறிவை கொண்டு மட்டும் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரு சிலர் கூறினாலும் அதை சரியாக அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மை

கடவுளுடைய உருவை, அமைப்பை, தோற்றத்தை, வளர்ச்சியை, தற்கால நிலையை இதுபோன்ற விஷயங்களை தான அறிவை கொண்டு நிர்மாணிக்க முடியாது. ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிவைக் கொண்டு நிற்ணயித்து விடலாம்.

ஒரு மையப் பொருள் இல்லாமல் எந்த வேலையும் இந்த உலகில் நடக்காத என்பது திட்டவட்டமாக உணர்த்தப்பட்ட ஒன்று. விதைகள் இல்லாமல் மரத்தையோ, சுவாசம் இல்லாமல் மனிதனையோ வளர்க்கவும், இயக்க - இயங்கவும் முடியாது. இதுவே மெய்ப்பொருள் எனப்படும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மெய்ப்பாருள் இருக்கும் போது இவையனைத்தையும் உள்ளடக்கம் செய்த ஒரு மெய்ப் பெருள் இருக்கிறது. இருந்தேயாக வேண்டும் என்பதை நம் அறிவு ஒப்புக் கொள்கிறது. அந்த மைய்யப் பொருளையே கடவுள், இறைவன் என்று அழைக்கிறோம். இந்நிலையில் சிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நாம் நமது இறை கொள்கையை திடப்படுத்திக் கொள்ள முடியும்.


இங்குதான் பகுத்தறிவு தோல்வியை தழுவுகிறது. கடவுளின் தோற்றம், வளர்ச்சியை நாம் தெரிந்துக் கொள்வதால் மனித வாழ்க்கைக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை . மாறாக அந்த கடவுள் அல்லது இறைவன் நிர்ணயம் செய்து அந்த வழியை பின்பற்றி நடப்பதே நமது வாழ்க்கையை சரியான வழியில் செப்பனிடுவதாகும்.

இதற்கு ஓர் உதார்ணம் கூறலாம். 'மாவிதை' யை எடுத்துக் கொள்வோம்!


பகுத்தறிவு மீது கனத்த நம்பிக்கையுள்ள ஒருவன் அந்த விதையை கையில் எடுத்துக் கொண்டு 'இது' எப்படி மரமாகிறது இந்த விதைக்குள் இது பெருத்த மரமாக வளர்வதற்குரிய அறிகுறிகள் இருக்கின்றனவா? இலைகளின் நீளம் , பூக்களின் வீரியம் , காய்களின் எண்ணிக்கை, பழங்களின் கனம் போன்றவை எந்த அளவு உள்ளது? என்று சிந்திக்கத் துவங்கினால் அவன் ஆயுட்காலம் முடிந்தாலும் விடைகான முடியாது "மாவிதை" யை இரண்டாக பிளந்து அதன் உள்ளேயுள்ள பொருள்களை ஆராய்ச்சி செய்தாலும் அவன் எண்ணத்தில் எழும் கேள்விகளுக்கு தெளிவு ஏற்படாது. இப்படிப்பட்ட பகுத்தறிவு அவனை 'புத்தி சுவாதீனன்' என்ற நிலைக்குதான் கொண்டு போய்விடும். 'எனது பகுத்தறிவு வாதமான சந்தேகங்களுக்கு விடை கிடைத்தால்தான் இதை நடுவேன்' என்று அவன் பிடிவாதம் பிடித்தால் அந்த விதையின் மூலம் அவனுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது என்பது திண்ணம்.

அதே சமயம் வேறொரு பகுத்தறிவுவாதி இதே'மாவிதை' யை எடுத்து அதை எப்படி புதைக்க வேண்டும் 'எந்த அளவிற்கு தண்ணீர் விட வேண்டும் அது முளைத்த பின் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சிந்திக்கிறான்' நன்கு சிந்தித்து அதுபடி செயலாற்றுகிறான்' விதைக்கு உதவக்கூடிய இவனது சிந்தனையின் விளைவால் பிறகு நல்ல மகசூலை பெறலாம் ' இப்படித்தான் பகுத்தறிவின் எதார்த்ததை பிரித்தறிய வேண்டும்'

பகுத்தறிவை கொண்டு இறைவனின் தோற்றம் ' வளர்ச்சி' தற்கால சூழ்நிலையை அறிய நாடுபவன் ' மாவிதையை' கையில் வைத்துக் கொண்டு ' மலர் ' இலை' காய் ' கனி ஆகியவற்றைப்பற்றி சிந்திப்பவன் போலாவான்' அவன் தன் ஈயுள் முழுவதும் இதுபற்றி தெரிந்துக் கொள்ள நாடினாலும் எப்படி அவனுடைய முயற்சிகள் பூஜ்ஜியமாக ஆகி விடுமோ அதேபோன்று தான் இறை தோற்றம்' வளர்ச்சி மற்ற நிலைகளை ப் பற்றி சிந்திப்பதுமாகும் ' அங்கு பகுத்தறிவு' புத்தி சுவாதீனன்' என்ற நிலையை தான் ஏற்படுத்தும்'


அதே சமயம் இறைகட்டளையை ஏற்று செயல்படுவது என்பது மாவிதையை புதைத்து தண்ணீர் ஊற்றி' வளர்ந்து இறுதியில் சிறந்த லாபத்தை ஈட்டுவதற்கு ஒப்பாகும் இங்கு தான் பகுத்தறிவு அதன் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணரலாம் அதனால் தான் இஸ்லாம் இறைதோற்றத்திற்கு முக்கியத்தும் கொடுக்காமல் இறைசட்டங்களுக்கும்' திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது' இறை தோற்றம் பற்றிய சிந்தனை' தாகூத்' திய சிந்தனையாகும்' என இறை தூதரால் எச்சரிக்கை செய்யப்பட்டது'

இறை வேதத்தை நாம் ஆராய்வோமேயானால் இறைவனின் கண்ணியம்' அவனின் ஆற்றல்' அவன் மேற் கொண்டுள்ள பணி' அவனின் பண்புகள்' அவனது ஆக்ரோஷ தண்டனைகள் ஆகியவற்றைப் பற்றியே திரும்ப திரும்ப வருவதை காணலாம்' இதை விடுத்து அவனின் பிறப்பு' வளர்ச்சி நிலைகள் பற்றிய ஆக்கங்களை குர் ஆனில் எங்கும் காணமுடியாது'

தேவையான இடங்களில் அவனுக்கு நிகராக எவருமே எதுவுமே இல்லை theve is hone like unto hem என ஒட்டுமொத்தமாக உதாரணங்கள்' கற்பனைகள் அனைத்திற்கும் பதிலாளிக்கப்பட்டு விட்டன எனவே கடவுள் சத்தி அறிவுக்கு உட்பட்டது தான் அறிவை செலுத்த வேண்டிய முறையில் செலுத்தினால்'

இந்த விளக்கத்தின் மூலம் கடவுளின் தோற்றம்' வளர்ச்சிப் பற்றிய சிந்தனையில் உள்ள கோளாறுகளையும்' அவன் கட்டளைகளை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளைம் 'ஓரளவு புரிந்திருப்பீர்கள்'

இப்போது இறைவன் நம்மிடம் எதிர்பாப்பது என்ன? என்பதை காணவேண்டும்'
மனிதனிடம் '' தலைமைத் தேவையாக'' இறைவன் ஒன்றை எதிர்பார்க்கிறான்' அது ' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்பதேயாகும்' குர்ஆனின் மைய கருத்து அது மனிதனுக்கு போதிக்கும் போதனைகளில் தலைமையானது' இத்தகுல்லாஹ்' revenence god என்பதேயாகும்' இதை மனிதன் பெற்றுவிட்டால் இவன் சுபீட்சத்திற்கு வழி வகுத்துக் கொண்டான் என்பது பொருளாகும்' இந்த இறை அச்சத்திற்கு ஒரு அடிப்படையை இறைவன் கூறுகிறான் 'எதற்காக இறையச்சம் வேண்டும் ?

இந்த இறையச்சம் நன்றிக் கடனாகவோ அல்லது கூலியாகவே என்றால் இரண்டுமேயில்லை. மாறாக அதான் மனித ஈடேற்றத்திற்குரிய அளவுகோல்.


இறைவன் கூறுகிறான்:


மனித இனமே! உங்கள் 'ரப்' புக்கு பயந்து நடவுங்கள் அவன் தான் உங்கள் அனைவரையும் ஒரேயொரு ஆத்மாவிலிருந்து படைத்தான் . அந்த ஆத்மாவிலிருந்தே அதற்கு வாழ்க்கைத் துணையையும் வெளிபடுத்தினான்' அவ்விருவரிலிருந்து எண்ணில்லா ஆண்களையும் பெண்களையும் பிரபஞ்ச பெருவெளியில் பரவ செய்தான். இதன் காரணமாக' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்' (அல் குர் ஆன் 4:1)

மனிதன் 'பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம்' என்று நிலையில் இருக்கிறான் ' இது முற்றிலும் அறியாமையாகும்' எதற்காக பிறந்தோம்' ஏன் பிறந்தோம்? பிறப்பின் நோக்கம், முடிவு, இடைப்பட்ட வாழ்க்கையின் அவசியம் போன்றவற்றை சிந்திக்கும் மக்களுக்கு ' இத்தகுல்லாஹ்'' வின் பொருள் புரிந்து விடும்.

' இறைவனுக்கு அஞ்சுங்கள்' எப்படி அஞ்ச வேண்டும்' குறிப்பிட்ட வணக்க முறையில் மட்டுமா ? இல்லை

வேறு கோணத்தில் அஞ்சவேண்டும்' அதாவது அவனுக்கு அஞ்சுவதே வாழ்க்கையாக இருக்க வேண்டும்' இதை தான் மனிதனிடம் இறைவன் தலமைத் தேவையாக எதிர்பார்க்கிறான்' நாம் செய்யும் செயல் ஒவ்வென்றிலும் நமது வழிக்காட்டியாக' இத்தகுல்லாஹ்' இருக்க வேண்டும்' இந்நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு உலகம் அமைதியைப் பெற்று விடும்'

புரிந்துக் கொள்ள'


இறையச்சம் மிக்க ஒருவன் பெறும் பதவி வகிக்கிறான் அவனை கொண்டு முடிய வேண்டிய வேலைக்காக சிலர் அவனை அணுகுகிறார்கள்' இவர்கள் நாடும் வேலைக்காக அவன் அவர்களிடம்' லஞ்சம்' கேட்டு கை நீட்டமாட்டான்' ஏனெனில் உழைக்காமல் வரும் பணம் பற்றிய அச்சம் அவன் மனதில் குடி கொள்ளும்' இறை தண்டனைக்கு அஞ்சுவான் ' இந்த ஒரு உதாரணத்தைக் கொண்ட இன்று பிரபஞ்சத்தில் நடக்கும் சரி நிலை' தவறு நிலைகளை கணித்து விடலாம்' எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் மனிதன் கண்ணியவான் ஆவதற்கு இறையச்சமே பிரதானமாக இருக்கிறது.

எவன் தூய்மையான அச்சமுள்ளவனாக இருக்கிறனோ அவன் தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன் (அல்குர்ஆன் 49: 13)

மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை வெகு அழகாக ஆக்கப்பட்டுள்ளது' திரும்பும் திசையெல்லாம் இன்பமயமான இடங்கள் இயற்கை, பெண்கள், பொன் ஆபரணங்கள் மற்றும் விவசாயம், மிருகங்கள் இவைகளனைத்தையும் மனிதன் நேசிக்கிறான். இவைகளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்கிறான். அவைகளுக்கு மத்தியில் உல்லாசமாக இருக்க வேண்டும் என ஆவல் கொள்கிறான் ' இஸ்லாமும் இதை கூடாது என்று சொல்லவில்லை' அனுபவிக்க சொல்லி வரவேற்கிறது' அதே சமயம் அதை விட சிறந்தததையும் குர் ஆன் எடுத்தோதுகிறது'

பெண்கள், ஆண்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்டக் குதிரைகள்' ஏனைய கால் நடைகள்' சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ஆசை மனிதனுக்கு அழகாகப்பட்டுள்ளது இவைகளைல்லாம் அழிய போகும் உலக வாழ்வின் சுக பொருள்களாகும்' அல்லாஹ்விடம் தங்குமிடம் உண்டு' இவற்றைவிட சிறந்த, மேன்னையான செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? என்று நபியே நீர் கேளும்' அதுதான் தக்வா. இறையச்சத்தின் மூலம் அவர்களுடைய இறைவனிடத்தில் சுகன சோலைகள் உண்டு' அச்சோலைகளுக்குக் கீழ் வற்றா நீரருவிகள் ஓடிக் கொண்டே இருக்கும்' இத்தகுல்லாஹ்வை திடமாக ஏற்றுக் செயலாற்றியவர்களுக்கு தூய துணைவர்களும் உண்டு (அல்குர்ஆன் 3:14,15)


இப்படி இறைவன் எச்செயலிலும் இறையச்சத்தையே பிரதானமாக எடுக்க சொல்கிறான். இறைபயம் அற்ற நிலையை இந்த உலகம் முழுமையாக ஏற்றுக் கொண்டால் பிறகு உலகம் சின்னாபின்னாப் படுத்தப்பட்டு விடும்


இன்று பிரபஞ்சமெங்கும் நடக்கும் வன் செயல்களுக்கு காரணம் தன்னை படைத்தவன் பற்றிய அறியாமையும் அவனிடம் பெறப்போகும் கொடூரமான தண்டனையையும் உணர திருப்பதேயாகும். மனிதனின் தன் மீது,தன் பலத்தின் மீது தன் குலத்தீன் மீது ,தன் சொத்தின் மீது, கொண்ட ஆர்வம் அவனை இறையச்சமற்ற நிலைக்கு ஆக்கிவிடுகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. மானிடப் பெருக்கத்தின் ஆரம்ப முதலே நடக்க துவங்கிவிட்டது. இறைபயம் இல்லாத மனிதனின் கர்வநிலை அவனை எந்த செயலையும் செய்து காட்ட தூண்டி விடுகிறது. தன் கூடப் பிறந்த சகோதரணையே தன் ரத்தத்தையே கொலை செய்யும் அளவிற்கு மனிதன் வந்து விடுகிறான்.

இறையச்சமில்லாததால் ஏற்பட்ட கொலை நிகழ்ச்சி இறையச்சமிருந்ததால் அதை மன நிறைவோடு ஏற்றக் கொண்ட நிகழ்ச்சி இன்றைய தக்வாதாரிகளுக்கு தக்க ஆதாரமாகும்.

Thanks,
Madukkur Thawheed Charitable Trust
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை


நீதிமன்றத்தில் நித்தியானந்தா......


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..



சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..



கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..



நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..



குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...



சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை. அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....



உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக.... நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..



நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..



இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,



ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...
என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலே உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.



ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்.... ஓடினேன்



நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......
ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...



எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.



என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.



செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?



நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பி கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??



இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.















Saturday, March 13, 2010

துபாய் காவல்துறை தலைவர் இஸ்ரேலிடம் சவால்

துபாய் காவல்துறை தலைவர் இஸ்ரேலிடம் சவால்!


ஞாயிறு, 07 மார்ச் 2010 15:36 இப்ராஹீம் World

துபாய் ஹோட்டலில் கடந்த ஜனவரி 20ஆம் தேதிக் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் அல் மஹ்மூது அவர்கள் கொலை செய்யப்பட்டது உலகெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

இதுகுறித்து துபாய் காவல்த்துறை தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி கூறுகையில் இந்த கொலைக்கு முழு காரணம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்பதர்க்கு பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் இது குறித்து தீவிரவிசாரனை நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் குற்றவாளிகளின் டி.என்.ஏவும் கைரேகைகளும் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அவர்களிடம் உள்ள குற்றவாளிகளுடைய டி.என்.ஏ மற்றும் கைரேகையை ஒப்பிட்டு பார்ப்பதற்கான பரிசோதனைக்கு தயாராக வேண்டும் என்றார்.
மொஸாதுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இஸ்ரேல் நிரூபித்தால் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய தயார் என துபாய் காவல்துறை தலைவர் இஸ்ரேலிடம் சவால் விடுத்துள்ளார்.

கொலையில் மொஸாதின் பங்கு பற்றிய குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 9, 2010

யாரும் யாருடைய எதிர் காலத்தையும் கணித்துக் கூற முடியாது

ஏகஇறைவனின் திருப்பெயரால்....




...அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். 6:119





--------------------------------------------------------------------------------



அறிவுச் சுடராம் அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் நிலவும் அறியாமையை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார்கள்.



மக்காவின் புனித இறை இல்லம் கஃபாவில் இணைவைப்பாளர்களால் நிருவப்பட்டிருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகளில் சில பிரபலமான சிலைகளுக்கு மக்காவிற்கு வெளியிலும் கிளை கோயில்கள் நிருவப்பட்டிருந்தன.



அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பின் கீழுள்ளவர்கள் ஏறத்தாழ இன்றைய இந்தியாவின் உயர்ஜாதி பரமஹம்ஸ வகையறாக்கள் போலவே அன்றைய அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவைகள் உங்களை இறைவனிடம் நெருக்கி வைக்கும் ஆற்றல் படைத்தவைகள் என்றும், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜோதிடம், மற்றும் சகுனம் போன்ற அனைத்து வழிகளிலும் அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைத்து வந்தனர்.



Ø ஏகஇறைவன் ஒருவனே,



Ø அவனிடத்தில் யாரும் யாருக்கும் பரிந்துப் பேச முடியாது,



Ø யாரும் யாருடைய எதிர் காலத்தையும் கணித்துக் கூற முடியாது,



Ø இறைவனின் நாட்டத்தில் நடக்கவிருப்பதை சகுனத்தின் மூலம் தடுத்துக் கொள்ள முடியாது.



என்ற நபிகளாரின் ஏகத்தவ முழக்கம் மக்கமா நகரில் முழங்கத் தொடங்கிய பொழுது அது அன்றைய உயர் ஜாதி வகையறாக்களின் செவிப்பறைகளை கிழிக்கும் இடி முழக்கமாகியது. அதனால் அவர்கள் தங்களது செவிகளுக்குள் விரல்களை நுழைத்துக் கொண்டதுடன் பொதுமக்களையும் அவ்வாறே ஏவினர்.



ஏகத்துவ முழக்கம் தங்களது பிழைப்பின் மீதும், உயர் ஜாதி அந்தஸ்த்தின் மீதும் விழுந்த சவுக்கடியாக கருதிய ஏமாற்றுப் பேர்வழிகள் இறைத்தூதரையும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களையும் இரும்புக் கரம் கொண்டு எதிர்த்தனர்



அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு தங்களின் அறிவுக் கூர்மையால் எதிர்கொண்டார்கள், எதிர்த்தவர்களையே ஏகத்துவததையும் ஏற்கச் செய்து அவர்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரேக் கோட்டின் கீழ் நிற்கச் செய்தார்கள்.



Ø மனிதர்கள் அனைவரும் சமம்,



Ø மனிதர்கள் புனிதர்கள் அல்ல,



Ø மனிதர்களில் யாரும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் அல்ல,



என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள் அதனால் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் அரேபிய தீபகற்பத்தில் மனிதர்களில் யாரும் யாருக்கும் தெய்வீகத்தன்மை இருப்பதாக கருதி தனி மரியாதை செலுத்த முன்வர வில்லை.



Ø அவர்களில் யாரும் யாருக்கும் தனி மரியாதை செலுத்த முன்வராத காரணத்தால்



Ø அவர்களில் ஜோதிட நிபுனர்கள் உருவாக வில்லை,



Ø அவர்களில் அருள்வாக்குக் கூறும் போலி ஆசாமிகள் உருவாகவில்லை,



Ø அவர்கள் பெயரால் ஆஸ்ரமங்களும், யாகசாலைகளும் நிருவப்;படவில்லை.



இன்றைய இந்தியாவின் நிலை.



அருளாசியும், அருள்வாக்கும் வழங்கிக் கொண்டு ஏராளமான பக்தகோடிகளைக் கொண்ட உயிருடன் வாழும் சாய்பாபாவின் பெயரில் டெல்லி மற்றும் பல மாநிலங்களில் சிவ்முரத்தி வேதி என்ற போலி சாமியாரால் அமைக்கப்பட்ட ஆஸ்ரமங்களில் உலகிலேயே அதிக ரேட்டில் விபச்சாரம் நடந்து கொண்டிருந்ததை அவரது ஞானக் கண்களால் (?) காண முடியவில்லை.



சாய்பாபாவிடம் இறையருள் இருப்பது உண்மை என்றால் அவர் பெயரால் அரவது பக்தன் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் நடந்து கொண்டிருக்கும் விஐபி விபச்சாரத்தை எனது ஞானக் கண்களால் கண்டேன் பக்தர்களே ஓடுங்கள் அந்த ஆஸ்ரமங்களை அடித்து நொறுக்குங்கள் அவனைப் படித்து சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள் என்று சொல்லி இருப்பார்.



அவரிடம் இறையருள் இல்லை, எவரிடமும் இருக்காது அவரும் ஒரு டுபாகூர் என்பதற்கு இதையாவது உதாரணமாக எடுத்துக்கொண்டு சாய்பாபா பக்தர்கள் அவரை விட்டு விலகுவார்களா? என்றுப்பார்ப்போம்.



உத்தரப்பிரதேசத்தில் கிரிபாலு மஹாராஜ் என்ற சாமியாரின் ஆஸ்ரமத்தில் இரண்டு தினங்களுக்கு முன் கூட்ட நெரிசலில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் தலைவர் கிரிபாலு மஹாராஜ் 1997ல் பாலியல் வழக்கிலும், நிலமோசடி வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.



சாமியார்களை நம்பக் கூடாது என்பது வேறு விஷயம் சாமியார்களுக்கு இன்னத் தகுதியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத அப்பாவி மக்களாக இருப்பதாலேயே போலி சாமியார்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இவருக்கும் வெளிநாடுகளில் ஏராளமான ஆஸ்ரமங்கள் இருக்கின்றனவாம் ?



திருவண்ணாமலை ராஜசேகர் பிறந்து 10 வது நாளில் எதிர்காலத்தில் பிரபல ஆன்மீக சாமியாராக வருவார் என்று ஜோதிடன் கணித்துக் கூறியதைக் கேட்ட அவருடைய பெற்றோர் அவரை சாமியார் ஃபீல்டில் திணித்து சந்நியாஸம், துறவரம், அருள் வாக்குக் கூறும் கலைகளை கற்கச்செய்து பால்குடிப் பருவத்தில் காவி உடையையும், ருத்ராட்ச மாலையையும் மாட்டிவிட்டனர். பால்குடிப் பருவம் மாறி பாலுணர்வுப் பருவம் வந்ததும் காவி உடையுடனும், ருத்ராட்ச மாலையுடனம் ரஞ்சிதாவிடம் தஞ்சம் புகுந்து விட்டார்.
ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்து விட்டது. இதையாவது உதாரணமாக எடுத்துக் கொண்டு ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தை தொலைக்கும் மக்கள் அதிலிருந்து விலகுவார்களா ? என்றுப் பார்ப்போம்.



எதிர்பாராமல் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரர், தேவநாதன், நித்யானந்தன் அல்லாத இன்னுமுள்ள சாமியார்கள், துறவிகள், திருமனம் செய்யாத வாஜ்பாய் ராமகோபாலன் வரையிலான பிரம்மச்சாரிகள் அனைவரையும் ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினால் ஒருவர் கூட தேற மாட்டார்கள்,தேற முடியாது.

ஆரிய பத்திரிகை தர்மம்



சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது.



முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.



ஏற்கனவே புவனேஸ்வரி விஷயத்தில் செய்தி வெளியிட்டு நடிகர், நடிகைகளின் கடுமையான கோபத்திற்கு உள்ளான தினமலர் மட்டும் நடிகர், நடிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் பதிலடியாக இதைப் பிரசுரித்திருந்தது.



சன் குழுமத்தினர் மட்டும் தினகரன் செய்தித் தாளிலும், சன் தொலைகாட்சியிலும் ஃப்ளாஸ் நியூஸாக வெளியிட்டது.



இன்றைய இந்தியாவின் தேவை.



ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர்.



எப்பொழுதாவது ஒன்றிரண்டுப் பேர் மட்டுமே அதுவும் உடன் இருப்பவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக காட்டிக் கொடுக்கப்பட்டு சிக்குகின்றனர். பொதுமக்களால், அல்லது போலீஸால் அதிகம் இவர்கள் சிக்குவதில்லை.



காட்டிக் கொடுக்கும் ஒன்றிரண்டுப் பேர்களையும் கூட நிரபராதிகளாக்கி விடுவதற்கு வாதத் திறமை வாய்ந்த வக்கீல் தொழிலாளர்கள் வீதி தோறும் மலிந்து கிடக்கின்றனர்.



உதாரணத்திற்கு கொலை, மற்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் இன்னும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒரு வேளை பிரேமானந்தா போல் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து விட்டாலும் கூட சிறையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வேறு ஒரு வாசல் வழியாக கிடைத்துக் கொண்டிருக்கும்.



அதுவும் அண்ணா, அல்லது காமராஜர் போன்ற பெருந் தலைகள் பிறந்த நிணைவு நாட்களில் அரசே அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து விடும். வெளியில் வந்து வேறொரு ஸ்டேட்டில் வேறொருப் பெயரில் ஆஸ்ரமம் திறந்து விடுவார்கள்.



Ø இதுவரை ஆன்மீகப் பெயரால் நிருவப்பட்டுள்ள ஆஸ்ரமங்கள், யாகசாலைகள், மடங்கள், பீடங்கள், அனைத்தும் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்.







Ø இனிவரும் காலங்களிலும் அவைகள் நிருவப்படாதவாறு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.







Ø இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கிய போலி ஆசாமிகளுக்கு மக்களின் வரிப் பணத்தில் சுகாதார உணவு வழங்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.







Ø உலகிலேயே கடவுள் பக்தியாளர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு சரியான கடவுளையும், அந்தக் கடவுளின் தன்மைகளையும் எடுத்துக் கூறி போலி சாமியார்களின் சுரண்டலிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.



ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அரசு தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அனைத்து பட்டி, தொட்டிகளுக்கும் சென்று சரியான கடவுள் கொள்கைகளை போதித்து நாடாளுவோரையும், நாட்டு மக்களையும் கீழ்காணுமாறு பிறரை ஏமாற்றாதவர்களாகவும், பிறரால் ஏமாறாதவர்களகவும் மாற்றிக் காட்ட முடியும்.



அபூபக்ர்(ரலி) அவர்களின் பணியாள் ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்டு இதை நான் எவ்வாறுப் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார் அதற்கவர்கள் தெரியாது என்றுக் கூற 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை ஏமாற்றி வந்தேன். அதற்காக அவர் எனக்குக் கூலியாகக் கொடுத்ததிலிருந்து தான் நீங்கள் இப்பொழுது உண்டது என்றுக்கூறினார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் தம் கையை வாய்க்குள் நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள். ஆதார நூல்: புகாரி 3842. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.



வயிற்றுக்குள் போனதை விட்டு விடுவோம் இனிவரும் காலங்களில் சரியானதை விசாரித்து உண்டு கொள்வோம் என்றில்லாமல் ஒரு அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை.



மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Monday, March 8, 2010

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்


தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளுடன் தமிழக சட்ட அமைச்சர் பேச்சு வார்த்தை

தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 என்ற கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.





தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து பரவலாக தமிழகத்தில் முஸ்லிம் சமுகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி ஏ.இ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சென்னையில் 22 முஸ்லிம் அமைப்புகள் பங்குக் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து தமிழக அரசு முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், தேசீய லீக் தலைவர் பஷீர் அஹ்மது, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மவ்லவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி, மவ்லவி இல்யாஸ் ரியாஜி, ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் எஸ். என். சிக்கந்தர், இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மது முனீர்;, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் உமர் பாரூக் மற்றும் வழக்குறைஞர் ஜீவகிரிதரன் ஆகியோருடன் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபாவும் இடம் பெற்றனர். இந்த வல்லுனர் குழு ஐந்து முறை கூடி தமிழக அரசுக்கு சமுதாயத்தின் சார்பில் அளிக்கப்பட வேண்டிய கோரிக்கையை வடிவமைத்தது.





இறுதியான இன்று (மார்ச் 6) அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் இந்த வல்லுனர் குழுவை சந்தித்து கருத்தறிய சட்ட அமைச்சர் துரைமுருகன் நேரம் ஒதுக்கினார். அரசு சார்பில் சட்ட அமைச்சருடன் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் திருமதி எஸ். மாலதி, தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் ஆர். சிவகுமார், துணை முதல்வரின் துணைச் செயலாளர் கே. ரகுபதி, சட்டத்துறை துணைச் செயலாளர் திருமதி ஜானகி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குக் கொண்டனர். சுமார் ஒன்னரை மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் தமிழக அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் வல்லுனர் குழு அளித்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இது குறித்த முறையான அரச அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகின்றது.
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. --

Thanks
Madukkur TMMK