Sunday, April 11, 2010

மணிகன்டனின் மனித நேயச் செயல்.

நெஞ்சை நெகிழச் செய்த மணிகன்டனின் மனித நேயச் செயல்.

சவூதி அரேபியா ரியாத் மாநகரில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் தமிழ்நாட்டைச்சேர்ந்த மனிகண்டன்.

அவர் தன் வேலையை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர்பேண்டால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பணக்கட்டு ஒன்று தரையில் கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து பார்த்த அவர் ஒருகணம் திகைத்து போனார். அத்தனையும் 500 ரியால் நோட்டுகளால் ஆன 50,000 ரியால்.

அதில் இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய்) தன் மனசாட்சி உறுத்தவே அருகிலிருந்த ஃபாஸ்ட்புட் கடையை அனுகி அக்கடை முதலாளியான கேரளாவைச்சேர்ந்த ஹம்ஜா என்பவரிடம் , இப்பணம் தாங்கள் கடையின் வாடிக்கையாளர் யாராவது ஒருவர் தான் தவற விட்டிருக்கவேண்டும் அப்படி யாராவது வந்து கேட்டால் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

மனிகண்டன் கூறியதைப்போலவே 15 நிமிடம் கழித்து சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதைபதைப்புடன் வந்து, தன் பணம் காணாமல் போனதை கூறினார். அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணிகன்டனின் மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர். இச்செய்தி மலையாள பத்திரிக்கையான கல்ஃப் மாத்யமம் -ல் வெளிவந்துள்ளது.

நன்றி அதிரை பாரூக்

இதிலிருந்து நம் படிப்பினை
இறைவன்மீது பயம் இருந்தால் மட்டுமே நாமும் நடந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment