Monday, April 12, 2010

சமுதாயம்

அன்புள்ள சமுதாயம்...
என் இனிய சலாம் ... உங்களுடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைபதிவை நான் உருவாக்கியுள்ளேன். நாம் நம் தவறை திருத்தி கொள்ளாதவரை தவறு செய்யும் (தவறு என்றால் கல்யாண வளமைமுதல்  நமது பெண்களின் ஆடம்பரம்,குறைவான ஒழுக்கம் பற்றி   சாதரணமாக பேசி மறந்துவிடும் வழமைவரை ) நமது குடும்பத்தாரை நாம் கண்டிக்காதவரை நாமும் தவறுக்கு உடந்தையாகிவிடுவோம். பயம் வந்து சரியாக நடந்து கொண்டோம் என்றால்  எங்களது சமுதாயம் எங்களது மக்கள் எங்களது கண்ணியம் எங்களது பாரம்பரியம் எங்களது கவுரவம் என்று மார்தட்டிகொளலாம். ....நமது குடும்பம் உண்டு நாம் உண்டு யாரும் எக்கேடு கேட்டு போகட்டும் என்று போகும் கபோதிகளில் நாமும்  ஒருவராக இருந்துவிட வேண்டாம் ..நமது சமுதாயம் மீதும் சிறிது அக்கறை வையுங்கள். நம் ஊரில் யாரும் சரியில்லை யாரும் யாரையும் மதிப்பதில்லை. இவர்கள் திருந்தபோவதில்லை என்று  இப்படி எல்லோருமே ஒருவரை ஒருவர் குறை கூறினால் யார்தான் சரியாக இருக்கமுடியும் .

முதலில் நம்மை நாமே குறைகூறும் பழக்கதைவிட்டு விட்டு நாமும்  நம் சமுதாயமும்  எப்படி  இருக்க  வேண்டும்  என்று  சிந்திப்போம் . சிந்திப்பதோடு 
 மட்டும் அல்லாமல் பின்னால்வரும் சமுதாயதிற்கு எந்தவொரு அவப்பெயரும்  வராவண்ணம்  சிந்திப்போம் செயல் முறைகளிலும் செய்து காண்பிப்போம். என்ன முறைகளில் செயல்படலாம் என்று உங்கள் கருத்துக்களை  இங்கே பதியுங்கள் விவாதியுங்கள் ..  ... ..வஸ்ஸலாம்..

1 comment:

  1. assalamu alaikkum fist ISLAM MARKKATHAI MULUMAIYAHA THERINDHU KOLLAVENDUM. ORU VUNMAIYANA MUSLIM EPPADI VALAVENDUM ENBADHAI ALLAH QUR AN-IL SOLLIVETTAN.IDHAI VITTU KAFIR POLA.. VALAMAIHAL,MUDAPPALKAM,SAHUNAM,NALLANAL,ADAMBARA,KALACHARAM,INAIVAIPPU,VATTIVANGUDHAL,VIBACHARAM IVAIYELLAM YAR CHEIHIRARHALO AVARHAL NARAGAVSIHAL.QUR ANAI PADITHU ADHANPADI VALKAI NADTHU ORU THULI ALUVUM PROBLEM ILLAI.

    ReplyDelete